ஈழத்துத் தமிழ்ப் பெண்களின் கூட்டுக் கவித்தொகைகள் ‘சொல்லாத சேதிகள்’ முதல் ‘ஒலிக்காத இளவேனில்’ வரை ஓர் ஆய்வு

த.அஜந்தகுமார்



1.முன்னுரை

ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சியில் பெண்களின் இடம் மிக முக்கியமானது. ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் ஆரம்ப காலம் தொட்டே பெண்களின் பங்களிப்பு பல்வேறு வடிவங்களிலும் இருந்து வந்தபோதிலும் 1980களுக்குப் பிறகு வந்து சேர்ந்த பெண்ணியச் சிந்தனைகள் இலக்கியப் போக்கில் புதிய மாற்றங்களையும் புதிய பாதைகளையும்; உருவாக்கின. ~~பெண்களின் பிரச்சினைகளை மட்டுமன்றி சமூகத்தை, கலை இலக்கியங்களை ஆண் நோக்கில் இருந்து இடம்பெயர்த்து பெண் நோக்கில் வைத்துப் புரிந்துகொள்வதற்கான முயற்சிகளும் அதன் வழியான பெண்மொழிகளின் உருவாக்கம் பற்றிய பிரக்ஞைகளும் இன்று பெண் எழுத்துகளில் பேசப்படும் பொருளாக முனைப்புக் கொண்டுள்ளது. அந்தவகையில் பெண் எழுத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம் பல்வேறு பரிமாணங்களில் மிளிரவேண்டியுள்ளது எனக் கொள்ளலாம்||
~~பெண்களை இரண்டாம் நிலைக்குத் தள்ளும் ஒரு சமூகத்தில் பெண் எழுத்தின் ஆளுமை என்பது அச்சமூகத்திற்கு எதிராக மறுப்பு நடவடிக்கையாகவும் சுத்திகரிப்புச் செயலாகவும் அமைகிறது. பெண் எழுத்துப் பல்வேறு பரிணாமங்களில் தோன்றிக் கொண்டிருந்தாலும் பெண் அனுபவத்தையும் ஆணாதிக்க எதிர்ப்பையும் சமகால வாழ்வையும் பெண் தன் மொழியில் வெளிப்படுத்தியதில் கவிதைகளின் இடமே தனித்துவமானது.

~கவிதை மொழி என்பது மனத்துடன் நெருங்கிய தொடர்புடையது என்பதனாலும் கலகம் செய்வதற்கு ஏற்ற வடிவம் என்பதனாலும் மொழியைப் பற்றிய மொழியாக அமைந்துள்ளது என்பதாலும் அவளுக்குக் கிடைக்கும் எல்லையில்லாக் கற்பனை வளத்தைத் தாங்கிக்கொள்ளும் ஆற்றல் மிக்கது என்பதாலும் அமுக்கப்பட்ட எந்தப் பெண்ணும் தனக்கான மொழியை உருவாக்கிக்கொள்ள கவிதையே சிறந்த சாதனம்|

ஈழத்தைப் பொறுத்தவரையில் பெண்களை அடையாளப்படுத்துவனவாகவும் பங்காளியாகவும் பாதிப்புற்றவளாகவும் கலகக்காரியாகவும் போரில் குதித்தவளாகவும் கவிதையிலேயே அவள் குரல் அதிகம் ஒலிக்கின்றது.

பெண்களின் கவிதைகள் இதழ்களிலும் பத்திரிகைகளிலும் பிரசுரமாகிவந்தாலும் சில பெண் படைப்பாளிகளின் கவிதைகள் தனித்தொகுதிகள் வெளிவந்திருந்தாலும் இந்த ஆய்வானது சொல்லாத சேதிகள் (1986) தொகுதி முதல் ஒலிக்காத இளவேனில் (2009) வரை வெளிவந்த கூட்டுக் கவிதைத் தொகுப்புகளை மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளுகின்றது. இந்தக் கூட்டுக்கவிதைத் தொகைகள் பற்றிய அறிமுகம், அவற்றின் பேசுபொருள் கிட்டத்தட்ட 25 வருடங்களை எட்டும் இந்த முயற்சியின் தடங்களும் அவற்றின் முக்கியத்துவமும், அவை கட்டியெழுப்பும் பெண் அனுபவங்கள் எட்டியிருக்கும் பெண்மொழிக்கான பிரக்ஞைகள், அந்தந்தக் காலத்தை உக்கிரத்துடனும் உண்மையுடனும் பிரதிபலிக்கும் சொல்முறை, இறுதியாக இம்முயற்சிகள் பற்றிய மதிப்பீடு என்பவற்றை இந்த ஆய்வின் வழி நிகழ்த்த விரும்புகின்றேன். ஏதோவொரு வகையில் ஈழத்தை மையமாகக்கொண்டு ஈழத்துப் பெண்களை மட்டுமே கொண்டமைந்த கவித்தொகைகள் மாத்திரமே ஆய்வின் பரப்புக்கருதியும் வசதி கருதியும் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இதுவரை வெளிவந்த தொகுதிகளாக,


1. சொல்லாத சேதிகள் (1986)
2. மறையாத மறுபாதி (ஐரோப்பா 1992)
3. உயிர்வெளி - பெண்களின் காதற் கவிதைகள் - கிழக்கிலங்கை(1999)
4. எழுதாத உன் கவிதை - தமிழீழப் பெண்களின் கவிதைகள் (2001)
5. இசை பிழியப்பட்ட வீணை - மலையகப் பெண்களின் கவிதைகள் (2007)
6. பெயல் மணக்கும் பொழுது - ஈழத்துப் பெண்களின் கவிதைகள் (2007)
7. ஒலிக்காத இளவேனில் (2009) (வட அமெரிக்கா)
ஆகிய கூட்டுக் கவித்தொகைகள் முக்கியமானவை.

இவை தவிர மை (2007), பறத்தல் அதன் சுதந்திரம்(2001) போன்ற கூட்டுக் கவிதைத் தொகைகள் வந்திருந்தபோதிலும் அவை தனியே ஈழத்துப் பெண்களின் கவிதைகளை மாத்திரம் கொண்டமையவில்லை.

2. கூட்டுக்கவித்தொகைகளின் நோக்கும் இலக்கும் உள்ளடக்கமும்


மேற்சுட்டிய கவித்தொகைகளின் தோற்றத்துக்கான காரணங்களைப் பார்ப்பது எமது ஆய்வுக்கு நன்மை பயக்கின்ற ஒரு விடயமாகும்.

~சொல்லாத சேதிகள்| முன்னுரையானது
~பெண்களிடையே பெண் என்ற இந்த நிலைப்பாடு தோன்றியுள்ள இக்கால வட்டத்தில் நாம் பெண்களுக்கான ஒரு கலை இலக்கிய நெறியை உருவாக்குவது முக்கிய தேவையாகும்| என்றும்,

~மறையாத மறுபாதி| முன்னுரையானது,
ஈழத்தில் இதுவரை காலமும் இருந்த, இருக்கின்ற பெண்ணடிமைக் கலாசாரத்துக்குப் பலமான அடியின் நாதமாக வந்த ~~சொல்லாத சேதிகள்|| கவிதைத் தொகுதியின் பிற்பாடு, அதன் இரண்டாவது அடி புகலிடத்தில் ஒலிப்பதை இங்கே காணலாம்.

~உயிர்வெளி| தொகுப்புரையில்,
சமகாலக் காதல்கவிதைகள் காதலின் பல்வேறு சாயைகள் பற்றிப் பேசும் அதேசமயம் காதல் பற்றிய பெண்களின் நவீன சிந்தனையோட்டத்தையும் காட்டுகின்றன. காதல் பற்றிய விவாதத்தை எழுப்புகின்றன. மனிதருக்கு இடையேயான உறவில் ஏற்படும் பல்வெறு சுழிப்புகளும் ஏற்ற இறக்கங்களும் காதலர்களுக்கு இடையே ஏற்படுவது இயல்பேயாகும். இத்தகைய சிக்கல்களையும் பன்முகத்தன்மைகளையும் கூட இவை எடுத்துக் காட்டுகின்றன.

~இசைபிழியப்பட்ட வீணை| முகவுரையில்
கல்வி, சுகாதாரம், வீடு, சம்பளம் என அனைத்தையும் போராடிப் பெறவேண்டிய சூழலில் பிறக்கும் இலக்கியம் தமை அடக்கும் சக்திகளுக்கெதிராக போர்க்கொடி உயர்த்துவது அவசியமாகின்றது என்றும்


‘பெயல் மணக்கும் பொழுது’ தொகுப்புரையில்
பெயல் மணக்கும் பொழுது தொகுப்பில் இடம்பெறும் கவிதைகள் காட்டும் உலகம் தமிழகச் சூழலில் பெணகவிஞர்கள் வெளிப்பாடு குறித்துக் கிளம்பும் விவாதங்கள் தளத்தில் இருந்து முழுவதும் மாறுபட்டது. பல பெண்களது அகவழிப்பயணம், வாக்குமூலங்கள், கண்டங்கள் மாறினாலும் மாறாது தொடரும் தந்தைமை ஆதிக்கமதிப்பீடுகள், நாளை நிச்சயமற்றுப் போனதால் இன்றே காதல் செய்யவேண்டிய தவிப்பு, அத்தவிப்பிலும் சுயம் இழக்காமல் இருக்க விரும்பும் உறுதி, பெயர் தெரியாத மரங்கள்,பூக்கள் மத்தியிலும் நகரும் வாழ்க்கை பெயர் தெரிந்தவை எல்லாம் மாறிப்போன கொடுமை என்று விரிகின்றன கேள்விகள்.



~ஒலிக்காத இளவேனில்| தொகுப்புரையில்,
இவற்றினைத் தொடர்ந்து ஈழத்தின் கவிதை வழியினைக் கடந்து தொடர்ந்து ஈழத்தோடு அவர்களுடைய பண்பாட்டையும் நினைவையும் வௌ;வேறு விகிதங்களில் பகிர்கிற அல்லது பகிராத குறிப்பிட்ட சில பெண்களது அனுபவங்கள் ஊடாக ஓர் அந்நிய மற்றும் சமகால வாழ்வை இத்தொகுதி பதிய முனைகிறது.
இத்தொகுதி தமது அரசியல் நம்பிக்கைகளாலும் வாழ்வு முறைகளாலும் வேறுபடுகின்ற சமூகத்தில் வௌ;வேறு பாத்திரங்களைக் கொண்டிருக்கிற உலகின் வௌ;வேறு நகரங்களில் உள்ளவர்களை உலகின் வௌ;வேறு நகரங்களில் உள்ளவர்களை இலங்கைப் பெண்கள் என்கின்ற பொது உடன்பாட்டின் அடிப்படையில் கூட்டிணைக்க முனைந்திருக்கிறது. இதில் எழுதியிருக்கிற ஒவ்வொருவரது உலகும் ஒவ்வொரு தனித்தனி ஆட்களின் உலகங்கள்.

இவ்வாறு ஈழத்தை மையமாகக் கொண்ட தொகுதிகளின் நோக்கங்கள், இலக்குகள், உள்ளடக்கங்கள் அமைகின்றன.

இதில் ஒலிக்காத இளவேனில் தொகுதி வரை வெளிவந்த கூட்டுத்தொகைகளின் தலைப்புகளே பெண்களின் நோக்கத்தை வெளிப்படுத்தி நிற்கின்றன.

~சொல்லாத சேதிகள்| - பெண்கள் இதுவரைக்கும் பெசமுடியாதவை சொல்ல முடியாதவை இப்போது சொல்லப்படும் தன்மையையும்

~மறையாத மறுபாதி| - என்பது அர்த்த நாரீஸ்வரர் ஆய் ஆண் - பெண் என்ற பாலடையாளத்தில் ~மறையாத மறுபாதியாக அவள் உள்ளதையும்

~உயிர்வெளி| என்பது உயிரோடும் உணர்வோடும் கலந்த பெண்களின் காதலைப் பேசும் வெளியாக இருப்பதையும்

~பெயல் மணக்கும் பொழுது| என்பது, ஈரக்கசிவை மறந்து தீய்க்கும் நெருக்கடி மிக்க மண்ணிலிருந்து கசிவுகளை உடலிலும் மனத்திலும் சொல்லிலும் செயலிலும் சுமக்கும் பெண்களின் பெயல் அது என்பதையும்

~இசை பிழியப்பட்ட வீணை| என்பது, உணர்வுகளாலும் அன்பினாலும் இசை நிரம்பிய பெண் வெறும் கதையாயும், பொருளாயும் கசக்கிப் பிழியப்பட்டு அவளின் சுயமற்றுப் போன அபத்தத்தையும்

~எழுதப்படாத உன் கவிதை| என்பது பெண் அங்கீகரிக்கப்படாத அவலத்தையும்

~ஒலிக்காத இளவேனில்| என்பது, இதுவரை ஐரோப்பாவில் ஒலிக்காத புதிய குரல்களையும் அதே நேரத்தில் பேசப்படாத பக்கங்களையும் உணர்த்தி நிற்கின்றது.

இவ்வாறு கூட்டுக்கவித் தொகுதிகளின் தலைப்புகளே அவற்றின் நோக்கங்களையும் பெண் விடுதலையை உயர்த்தியும் அழுத்தியும் நிற்பதை வெளிப்படையாகக் காணலாம்.

3. கவித்தொகைகளின் பாடுபொருள்

உன்னதமான மனித குலத்தின் அரைப்பகுதியினராகிய தம்மை மனிதன் அற்ப வெறும் இயந்திரங்களாகவும் கருவிகளாகவும் கருதும் நிலை மாறவேணும் என்பது இன்றைய பெண்ணிலைவாதப் போராட்டங்களின் முக்கிய கோரிக்கையாகும் என்று ~சொல்லாத சேதிகள்| முன்னுரையில் சித்திரலேகா மௌனகுரு குறிப்பிட்டார். 1986இல் வைக்கப்பட்ட இந்தக் கோரிக்கை இன்றுவரை நிறைவேறியது என்று கூறிவிடமுடியாது. புலம்பெயர்ந்த சூழலிலும் அடக்குமுறைகள் வேறுவகையில் தொடரவே செய்கின்றன. இன்றும் அதே கோரிக்கையே உள்ளது. புலம்பெயர்வு பெண்களுக்கு தங்கத் தட்டில் தந்திட்ட சுதந்திரம் என்று சிலர் பேசினாலும் அது 100மூ உண்மையானது அல்ல. ~ஒலிக்காத இளவேனில்| (2009) தொகுப்பாளர்கள், ~தாம் ஒலிப்பதை மறுக்கின்ற சூழலின் மீதும் சுய மரியாதையின்றி அவமதிக்கப்படும் ஆண் - பெண் உறவுச் சிக்கல்களின் மீதும் பேச்சை ஒடுக்கும் குடும்ப நிறுவனங்களின் மீதும் சற்றேனும் இவை தம் வசனங்களைப் பதிவு செய்திருக்கின்றன. இறுக்கமான சமூகக் கட்டமைப்பில் இத்தகைய பகிர்வுகள் மாற்றத்திற்கான சிறு சிறு சலனங்களே எனலாம் என்பதில் இருந்து நாம் அறியலாம்.

1986களில் ~சொல்லாத சேதிகள்| மூலம் வீறெய்தத் தொடங்கிய கவிதை மூலமான பெண்ணிய விழிப்புணர்வு, சிந்தனைத் தடங்கள் 1992இல் புலம்பெயர் சூழலில் இருந்து வெளிவந்த மறையாத மறுபாதி மூலம் இன்னும் அகலித்துக்கொள்ளத் தொடங்கியது. ~உயிர்வெளி| என்ற தனித்த பெண்களின் காதற் கவிதைகள் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சின. ~குடத்து விளக்கன்ன கொம்பன்னார் கரம் புறப்படா| என்று முத்தொள்ளாயிரம் கூறியிருந்தாலும் சங்ககால பெண்கள் சிலரின் காதல் கவிதைகள், ஆண்டாள் மரபில் தனித்த அடையாளத்தை இத்தொகுதி உண்டாக்கியமை முக்கியமானது. தமிழீழப் பெண்களின் கவிதையான எழுதாத உன் கவிதை பேசும் போது அடுப்படிக்குள் இருந்து பணிவிடை செய்த பெண் பேர்க்களத்தில் நிற்கும் அனுபவமும் பேசப்படத் தொடங்கிற்று. ~இசை பிழியப்பட்ட வீணை| மூலம் கூடைக் கொழுந்தின் சுமை போல் அவர்களை அழுத்திய பொருளாதார அரசியல், குடும்பச்சுமைகள் பற்றிப் பேசினர். பெயல் மணக்கும் பொழுது 2007 வரை ஈழத்தில் எழுதிய பெண்களின் கவிதைகளை பெண்ணெழுச்சி, காதல், காமம், போர் என்று பல தளங்களில் வெளிப்படுத்தியது. ஒலிக்காத இளவேனில் தேசம், புலம்பெயர்வு, பெண்ணின் வாழ்வியல் என்ற தளங்களில் பெண்ணின் உணர்வாயும் குரலாயும் ஒலித்தது.

இன்று 1986களில் இருந்த பெண்களுக்கான கலை இலக்கிய நெறியை உருவாக்குவது என்பது இலக்கிய நெறியை உருவாக்குவது என்பது பெண்மொழியை உருவாக்கல் என்ற தளத்துக்குள் இலங்கையை மையமாகக் கொண்டிருந்த பெண்ணியச் சிந்தனைதான் இன்று சர்வதேசியம் தழுவிய ஒன்றாகவும் மாறவேண்டிய அவசியம் உணரப்படுகின்றது.

இதனை ~ஒலிக்காத இளவேனில்| தொகுப்பாசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.
~வடஅமெரிக்காவைக் களமாகக் கொண்டிருக்கிற இத்தொகுதியில் அமெரிக்காவில் 2001 செப்ரெம்பர் உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டதற்குப் பின்பான அரசியலில், ஓர் கால கட்டம் மறைமுகமாகவேனும் பேசப்பட்டிருக்கவேண்டும். ஈழத்தில் மட்டுமல்ல உலகெங்கிலும் அதன் விளைவுகள் பற்றி இப் பெண்களுடைய எழுத்திலும் பதியப்பட்டிருக்கவேண்டும் என்பதே எமது விருப்பமாயிருந்தது. அதுவே தமிழ்க் கவிதைச் சூழலுக்கான வளர்முகமாகத் தோன்றிற்று.

இதையே ~பெயல் மணக்கும் பொழுது| தொகுதிக்கு சேரன் காலச்சுவடு இதழில் எழுதிய மதிப்புரையில் வேறொரு விதத்தில் பின்வருமாறு கூறுகின்றார்.

~பெண்மொழியைப் பற்றி மட்டுமே பேசுவதை விடுத்து பெண்மொழி, பெண்ணிய அனுபவங்கள் என்கிற சாளரத்துக்கூடாக விரியும் புதிய வடிவங்கள், புதிய உறவு நிலைகள், புதிய பண்பாட்டுக் கோலங்கள், புதிய கலாசார இலக்கணங்கள், புதிய பாலினஃ பாலியல்பு உறவுகள் என்பவற்றைப் பற்றிப் பேசவேண்டியிருக்கிறது|

எனவே 1996 - 2009 வரையான காலப்பகுதியில் வெளிவந்த கூட்டுக் கவிதைத்தொகுதிகள் வழியே பெண்ணிய எழுச்சியை, தடங்களை, விழிப்புணர்வை, எதிர்ப்பை, விடுதலை அவாவை, புலம்பெயர்வுச் சூழலை, அங்குள்ள புதிய விலங்குகளை, பெண்மொழிக்கான பிரக்ஞைகளை, சர்வதேசியத்தைத் தொட்டுத் தழுவமுனையும் பெண்ணெழுத்தின் தரிசனத்தை தீர்க்கத்தை கிட்டத்தட்ட 25 வருடகாலத்தின் ஊடாக ஒரு வரலாற்றைப் போல் தரிசிக்க முயல்வோம்.

அடிமைத்தனத்தை இனங்காணல்,ஆணாதிக்க எதிர்ப்பு, அடிமைத்துவ கலாசார எதிர்ப்பு, புதிய சூழலிலும் பழைய விலங்குகளை இனங்காணல், ஆண்-பெண் சமத்துவக்குரல்,புலம்பெயர் வாழ்வு சாதக-பாதகம், பாலியல் திருப்தியீனங்களின் வெளிப்பாடும்-உணர்வும், ஒருபாலுறவு, சர்வதேசப்பின்னணியில் தன்னை இனங்காணல், அடையாளச்சிக்கல்கள், தனிமை, போர் வாழ்வு, வன்முறை எதிர்ப்பு பெண் மொழிப்பிரக்ஞை என்று பல தளங்களில் பெண்களின் கவிதைகள் ஏதோவொரு வழியில் தொடர்ந்;தும் இயங்குவதை இத்தொகுதிகளின் பொதுப் பண்பாகக் காணமுடியும்.

3.1 அடிமைத்தனத்தை இனங்காணல்

‘வானில் பறக்கும் புள் எல்லாம் நாணாக மாற’ எண்ணிய பெண்
‘அம்மியும் பானையும்
தாலியும் வேலியும் என்னை நிலத்திலும்
நிலத்தின் கீழ்
பாதாள இருட்டிலும்’
(சங்கரி)

அழுத்தும் நிஜத்தினை கனவுடைந்த குரலோடு இவர்கள் கவிதைகள் வெளிப்படுத்தின. . இது இந்த நிலத்தில் மாத்திரமன்றி
குளிரோ வெயிலோ
காலத்தோடு புணர்தல்
கடமைக்காய்ப் பம்பரமாதல்
புலம்பெயர்ந்த போதும்
மாறுபடாத ஒன்று
(சுமதிரூபன்)
என்று புலம்பெயர் சூழலிலும் தொடர்ந்தபடியிருக்கிறது. இதனையே ஆழியான்,

என் ஆதித்தாயின் முதுகில் பட்ட
திருக்கைச் சவுக்கடி
நான் காணும்
ஒவ்வொரு முகத்திலும்
தழும்பாய்
படர்ந்து கிடக்கிறது
என்று வெளிப்படுத்துகிறார்.


3.2 ஆணாதிக்க எதிர்ப்பு

பெண்ணை என்றும் பேதையாகவும்
வீரபுருச நாயகனாகவும்
நோக்கும் வரைக்கும் எனது நேசமும்
பேதை ஒருத்தியின் நேசமாகவே
ஊனக்கும் தெரியும்
(சங்கரி)

ஏன்ன செய்வது
நான் விடுதலை அடைந்தவள் உன்னால்
அந்த உச்சிக்கு வர முடியாதே

என்று சொல்லாத சேதிகளில் வெளிப்பட்ட பெருமிதம் ஆணின் மொழியை அதிகாரத்தை இன்னும் மூர்க்கமாக எதிர்ப்பதாக ஒலிக்காத இளவேனில் தொகுதிக் கவிதைகளை நாம் காணலாம்.


திணிக்கப்பட்ட காலை
திணிக்கப்பட்ட எழுத்து
திணிக்கப்பட்ட ரசனை
திணிக்கப்பட்ட குறி
(ஜெபா)

ஏன்று ஆண்களால் திணிக்கப்பட்ட வாழ்க்கையை அவர்கள் வெறுத்தார்கள்.

அவரின் மகள்
இவரின் மனைவி
உங்களின் தாய் என்பதைவிட
நான் என்பதாக
விட்டுச் செல்ல விரும்புகிறேன்
எனக்கான என் சுவடுகளை.

ஏன்று ஆணினால் திணிக்கப்படும் வாழ்க்கையை, அமைப்பை அவர்கள் வெறுத்தார்கள். தமது தனித்துவத்தை நிறுவுவதை விரும்பினார்கள்.

3.3 ஆண் பெண் சமத்துவக்குரல்கள்

“விலங்குகளுக்கெல்லாம்
விலங்கொன்றைச் செய்தபின்
நாங்கள் பெறுவோம்
விடுதலை ஒன்றை” (சிவரமணி) என்றும்

“புதிய வாழ்வின்
சுதந்திர கீதத்தை
இசைத்துக் களிப்போம்
வாருங்கள் தோழிகளே” என்றும் விடுதலைக்குரல்கள் சொல்லாத சேதிகளில் ஒலித்தது.

சமையல் தொடங்கி
படுக்கை வரை
இலவசசேவை வழங்கியது போதும்
………..
சூழவுள்ள சகலவற்றிலும்
உனக்கும் சமபங்குண்டு
வெளியே வா (மைத்திரேயி) என்று மறையாத மறுபாதியிலும்

நீயும் நானும்
திறப்புகளை வீசிவிட்டு
வெளிNயு வருவோம்
கொஞ்சம் வாழ்வதற்கு

என்று ஒலிக்காத இளவேனிலிலும் அந்தக்குரல்கள் தொடர்ந்து ஒலிப்பதைக் காணலாம். பெயல் மணக்கும் பொழுது தொகுதியில்
ஆண்களின் அதிகாரத்தை மீசைப்புடையனாக இனங்கண்ட பெண்(அனார்) தான் ஆமையாக ஆக்கப்படுவதை உணர்கிறாள்(விஜகலா). வெளவாலாகவேனும் தன்னிருப்பை நிறுவவேண்டும்(வாசுகி) என்று தலைப்பட்டு நிற்பதையும் தரிசிக்கிறோம்.





3.4 போர் வாழ்வைப் பேசலும் - எதிர்வினையும்

போர் வாழ்வின் அவலத்தை, வன்முறையின் கொடூரத்தை, புலம்பெயர் சூழலிலும் அகாலத்தில் நிகழும் சாவுகளின் அபத்தத்தை, சிறுவர்களை போருக்குப் பயன்படுத்தல் மீதான எதிர்வினையை, தம் அவலத்தை மாத்திரம் அல்லாது வேறொருவனின் துயரிலும் தன் நாட்டுத் துயரைக் காணும் மனத்தை என்று பல தொடர்ச்சிகளை பெண்ணிலை நின்று அவர்களின் கவிதைகள் பேசுகின்றன.

தெருப்புழுதியில் உன் உடம்பு
முதுகெல்லாம் இரத்த வெள்ளம்
நீதானா என்று குனிந்து பார்த்தேன்
ஓம் ராசா நீயேதான்
‘ஏன் ஆச்சி அழுகின்றாய்?’
என்று கூடிநிற்கும் சனம் கேட்க
“பொடியனைத் தெரியுமா உனக்கு?”
என்று மிரட்டுகிறான் காக்கிச்சட்டை (சன்மார்க்கா –சொல்லாதசேதிகள்)

என்று தன்மகனையே மகனென்று காட்டமுடியாத அவலத்தை ஒரு தாயின் புலம்பலாக சொல்லியது.

சோட்டியைப் பிடித்தபடி திரிந்த
பிள்ளையைக்
கொண்டு போனீர்கள்
குண்டுதாரியென வீரரென வந்து சொன்னீர்கள்
ஓ…ஓர் பிணத்திடம் சொன்னீர்கள் (ஒலிக்காத இளவேனில்)

என்று இளம்பிள்ளைகள் போரில் பயன்படுத்தப்படுவதை, ‘பிள்ளைகளின் பிணத்தில் நிலம் இருப்பதை’(கற்பகம் யசோதரா) ஒருதாயின் மாற்றுக்குரலாக இக்கவிதை பிரதிபலித்தது.
புலம்பெயர்சூழலில் அங்குள்ள வன்முறைகளுக்கும், அரசியல்களுக்கும் பிள்ளைகள் பலியாகும் பரிதாபமும் அங்கு ஏற்படத்தொடங்கியது. போர்ச்சூழலில் இருந்த தாயின் புலம்பல் அங்கும் வேறுவடிவத்தில் தொடரத் தொடங்கியது.

காவெடுத்தவர்கள் நினைக்கப் போவதில்லை
ஒரு பயித்தியக்காரியைப் போல
தமக்கான குழிகளை வெட்டியபடி
காத்திருக்கும் பெற்றவர்களை (தான்யா –ஒலிக்காத இளவேனில்)

எப்போதும் போரிலும் வன்முறையிலும் இலகு இலக்காக இருப்பவள் பெண்தான். அதற்கான எதிர்ப்பு கடும்தொனியில் கோணேஸ்வரிகள் கவிதையில் கலா(ரேவதி) வினால் வெளிப்படுத்தப்படுகிறது( பெயல்மணக்கும் பொழுது)

சமாதானத்திற்காய்ப் போரிடும்
புத்தரின் வழிவந்தவர்களுக்காய்
உங்கள் யோனிகளைத் திறவுங்கள்

……………

சிங்களச் சகோதரிகளே
உங்கள் யோனிகளுக்கு
இப்போது வேலை இல்லை

இதே கடும்தொனியை ஒலிக்காத இளவேனில் தொகுதியிலும் காணமுடிகின்றது. (நிவேதா)

அப்பாவின் உயிரைப் பறி
அக்காவையும் ஆருயிர்த் தோழிகளையும் சிதைத்து
பாழுங்கிணறுகளுக்குள் வீசியெறி
ஏன் என்னையும்
அணு அணுவாய்ப் பிடுங்கிப் போட்டு
குரூர இன்பங் கொள்.

இதற்கு இடையில்,
மெச்சாமலிருக்க முடியவில்லை
சீருடைக்காரரின் மீது காறி உமிழ்ந்து
மரணத்தைத் தழுவியு பெண்ணின் தன்மானத்தை.(நிவேதா)
என்ற பெண் சார்ந்த உணர்வையும் புரட்சிக்கான ஏற்றுக்கொள்ளலையும் தரிசிக்கமுடிகிறது.

எமது போர்வாழ்வை உலகவரலாற்றுடன் பொருத்தி நோக்கும் சர்வதேசிய வியாபகத்தை இப்போதும் எம் கவிதைகள் அடைந்துவருகின்றன. இது ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல பெண்கவிதைகளின் ஒரு வளர்முகநிலையாகும்.

இன்று! பத்திரிகையின் முன்புறம்
மனம் நொந்து அழும்
ஒரு பலஸ்தீனக் கிழவன் முகம்
என் தாத்தாவின் அழுகையை
ஒத்திருந்தது ( பிரதீபா தில்லைநாதன்)

இதே போல பெண்ணினது மாதாந்திர இரத்தத்தை வரலாற்றின் குருதிக்கறையாக காணும் போக்கும்(மேலும் சில இரத்தக் குறிப்புகள் -அனார்) இங்கு முக்கியமானது.

3.5 புலம்பெயர்வு சாதக – பாதகம்

புலம்பெயர்வு சார்ந்த அனுபவங்களை மறையாத மறுபாதி, பெயல்மணக்கும் பொழுது,மை, ஒலிக்காத இளவேனில் ஆகிய கவித்தொகைகளில் இனங்காணமுடிகின்றது.

போர் தருகின்ற சோகங்களுக்குள்ளாலேயும்
ரகசியமமாய்ச் சிலிர்த்துக் கொள்கிறேன்
புலம் பெயர்ந்தமை தங்கத் தட்டில் தந்திட்ட சுதந்திரம்
ஏன் மகள்களுக்கும்
நம் பெண்களுக்கும். (வசந்திராஜா –பெயல் மணக்கும் பொழுது)

என்று முதலில் தோன்றினாலும் புதியபண்பாட்டுச் சூழலில் அது அகதி உணர்வையே அதிகம் விதைத்தது.

இரும்பு வலைப்பின்னல்
இடறுகின்ற தெருக்களில்
இலக்கின்றி அலைகின்ற
இலங்கைச் சருகு நான் (தயாநிதி – மறையாத மறுபாதி) என்று எண்ண வைத்தது.

கனவுகளும் கற்பனைகளும்
ஒளி கண்ட பனியாக
கலைந்து போகும் (மொனிக்கா – ஒலிக்காத இளவேனில்) தன்மையை அவர்கள் இனங்கண்டார்கள். ஓலிக்காத இளவேனில் தொகுதியில் புலம் பெயர்வு –குடும்பம், புலம்பெயர்வு –மாணவம் என்ற தனி அலகுகளில் கவிதைகள் பகுத்து வழங்கப்பட்டுள்ளமை நோக்கத்தக்கது. தாம் மாத்திரமன்றி அந்த நிலத்துப் பூர்விக குடிகள் கூட வெள்ளையர்களால் சுரண்டப்படுவதையும் அடக்கப்படுவதையும் பெண்கள் அக்கறையோடு பதிவு செய்கின்றமை முக்கிய விடயமாகும்.

3.6 பாலியல் துஸ்பிரயோகம் - பாலியல் திருப்தியீனங்கள் - ஒரு பாலுறவு

பெண்களின் கவிதைகள் ஆண்கள் தம்மைப் போகப்பொருள்களாய்ப் பார்ப்பதையும், அறியாப் பருவத்தில் தம்மைச் சிதைக்கும் ஆணின் உடலதிகாரத்தையும், அதற்கான எதிர்வினையையும், அடுத்த கட்டத்தில் தமது பாலியல் திருப்தியீனங்களையும் வெளிப்படையாகப் பேசுகின்றன. அது மட்டுமல்ல ஒரு பாலுறவு விருப்பத்தையும் சொல்லிநிற்கின்றன.

பெண்களின் ஆத்மார்த்தமான உணர்வுகளைப் பேசுகின்ற உயிர்வெளி காதல் கவிதைகள் மிக முக்கியமான தொகுதியாகும்.

அதே நேரத்தில் சொல்லாத சேதிகள் தொகுதியில்

எனக்கு முகம் இல்லை
இதயம் இல்லை
ஆத்மாவும் இல்லை
அவர்களின் பார்வையில்
இரண்டு மார்புகள்
நீண்ட கூந்தல்;
சிறிய இடை
பருத்த தொடை
இவைகளே உள்ளன

கணவன் தொடக்கம்
கடைக்காரன் வரைக்கும்
இதுவே வழக்கம் (சங்கரி)

போகப் பொருளாக மாத்திரமே பெண்ணைப் பார்க்கின்ற அபத்தம் சொல்லப்பட்டது.


அறியாப் பருவமதில்
அந்தரங்கங்கள் அத்துமீறப்பட்டு
கதறித் துடித்தபடி
கண் விழித்திருந்த
இரவுகளினதும்
இவர்களது அருவருப்பூட்டும் தீண்டல்கள்
கலைத்துப் போன கனவுகளினதும்
நீட்சியில்
கற்பனையின் எல்லைகளை மீறுவதாயிருக்கிறது
இவர்களில் ஒருவனோடு
காதலில் வீழ்வது. (நிவேதா – ஒலிக்காத இளவேனில்)

என்று ஆண் மீதான வெறுப்பும் சிறுவயதில் பெண்ணுடல் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை அடுத்த கட்டமாக பெண்ணானவள் தன்னுடைய ஆசைகளை அந்தரங்கங்களை பேசும் நிலைக்கு முன்னேறிவிட்டாள். இதன் முகிழ்ப்பாய் பாலியல் திருப்தியீனங்களை அவள் பேசத் தலைப்படுவதைக் குறிப்பிடலாம்.

முத்தங்களாகிக் கலவியில் மயங்கி
இறுக அணைத்து வியர்வையில் ஒட்டி
கரைந்து போகும் அடுத்த கணமே
நீ ஆணாகிவிடுகிறாய்
……….
ஓவ்வொரு நாளும்
பைத்தியமாகிறது உறவு
………..
எதையும் நீ புரிந்ததில்லை (பாமினி)

எல்லாம் முடிந்து
அமைதியாய்த் தூங்குகிறான் அருகே.
ஏன் இத்தனைய நாளைய
காதலும் கனிவும்
இதந்தரு மென்னுணர்வுகளும்
பொங்கியெழுந்த குறியின் முன்
ஒழுகிக் கிடக்கிறது கட்டிலின் கீழே. (மைதிலி)

மேலும் கற்பின் ஒழுக்கக் கோடுகள் கூட அழிந்து போய்விடுவதையும் பெண்களின் கவிதைகள் பேசுகின்றன.

குறிகளும் யோனிகளும் இன்று இப்படித்தான்
எதற்காகவும் யாருக்காகவும் காத்திருப்பதி;ல்லை

காதலனுக்காகக் காதலியும்
மனைவிக்காக கணவனும் என்ற
எல்லை தாண்டப்படுகிறது
நம்பிக்கை காயப்படுத்தப்படுகிறது (ரேவதி – ஒலிக்காத இளவேனில்)

இது மாத்திரமல்ல ஆணரசியலுக்கு ஆதிக்கத்துக்கு எதிராக ஒரு பாலுறவைக் கூட பெண்களின் கவிதைகள் பேசத்தலைப்பட்டுவிட்டன.


3.7 பெண்மொழியைக் கட்டமைத்தல்

பெண்ணனுபவங்களைப் பகிர்தல் பிரச்சினைகளை எடுத்துரைத்தல் என்பது ஆண்கள் உருவாக்கிய கலை இலக்கியச் செந்நெறியிலேயே நிகழ்ந்தது, அதே போல அவர்கள் மொழியும் எழுதும் மொழியிலேயே தம் எழுத்துக்களையும் கொண்டுவந்தனர். ஆயினும் பெண்ணியச் சிந்தனைகளின் வருகை இவற்றில் மாற்றத்தை ஏற்படுத்த விழைந்தது. சொல்லாத சேதிகள் தொகுதி முன்னுரையிலே (1986) பெண்களுக்கான கலை இலக்கிய நெறியை உருவாக்கவேண்டியதன் அவசியம் கூறப்பட்டிருந்தது. இன்று பெண்மொழி பற்றிய பிரக்ஞை அதிகரித்து வருகிறது. இதை அவர்களின் கவிதைகளிலும் காணலாம்.

ஏதுமற்ற வெளியில் குருதி துளிர்க்க
காற்றைக் கிழித்து சுழன்று கீழிறங்கும்
மனச்சாட்டையின் முறுக்கிய மொழியில்
என் முலைகளுக்கு நான்
பேசக் கற்றுக் கொடுத்தேன்

இனியெதற்கு என் தயவு?
முலைகளே பேசட்டும்…
கழுத்தை நெரிக்கும்
‘ஆம்பிளை’த்தனங்களைப் பற்றி..
குhல்களைப் பிணைக்கும்
யுத்த சங்கிலியைப் பற்ற.p…..
இன்னமும்,
அந்தரத்தில் அலைவுண்டிருக்கும்
என் எப்போதைக்குமான
கனவுகளைப் பற்றி (நிவேதா – ஒலிக்காத இளவேனில்)

முலை என்பது தனியே முலை என்ற பெண்ணுறுப்பு மாத்திரமல்ல. அது பெண்ணின் அடையாளம். அவளின் ஊற்று அடையாளம். இதனால்தான் திருமாவுன்னி முலை திருகி எறிந்து தன் எதிர்ப்பைக் காட்டினாள். கண்ணகி ஒரு முலையெறிந்து மதுரையெரித்துக் கோபம் காட்டினாள். குட்டிரேவதி தன் கவிதைத் தொகுப்பிற்கு ‘முலைகள்’ என்று தலைப்பிட்டாள். இங்கு முலைகள் பெண்மொழியின் அடையாளமாய் நிற்கின்றன.



சப்பட்டையர்கள் கறுவல்கள் சோனிகள்
தொடருகிற உன் துவேசங்கள்
நான் தாயாக அரவணைக்கிற
குழந்தைகளை அண்டவிடேன்
வஞ்சனையை மனித குரோதத்தை பகைமையை
கொண்டு ஆடுகிற மொழி
அழிந்தால் என்ன?

ஒரு மரணத்தை நியாயப்படுத்தவோ
மரணத்திற்குப் பழகியோ போகாதவரை
அவர்களுடைய எந்த மொழியும்
எனது மொழியே ( பிரதீபா – ஒலிக்காத இளவேனில்)

இங்கு ஆண்மொழியின் குரோதம், வன்முறை சுட்டப்படுவதோடு பெண்மொழியின் மென்னுணர்வும் பகிரப்பட்டுள்ளது.


இவைதவிர “ கூடையைத் தூக்கித் தூக்கி
கூனிப் போனது எங்கள் வாழ்க்கை” என்று துன்பக் கேணியாய் விளங்கும் மலையகச் சூழலையும் பல விடயங்களையும் பேசி நிற்கின்றன.

இவ்வாறு பல உள்ளடக்கங்களை விரிந்ததளத்தில் கூட்டுக் கவித்தொகைகள் பேசியுள்ளன.


4. பெண் கவிதைகளின் வெளிப்பாடு மற்றும் அழகியல்

இந்தக் கவித்தொகைகள் ஈழக்கவிஞைகளை அடிப்படையாக் கொண்டு ஈழம், தமிழகம், புகலிடம் என்ற இடங்களில் இருந்து தொகுக்கப்பட்டிருக்கின்றன. சில கவிதைகள் அடையாளத்திற்காகவும் ஆவணத்திற்காகவும் தோன்றியிருக்கின்றன. குறிப்பாக, மலையகப் பெண்கவிஞைகளின் ‘இசை பிழியப்பட்ட வீணை’ உள்ளடக்கத்திற்காகத் தொகுக்கப்பட்டது. அதனால் அத்தொகைக்கவிதைகளில் சிறந்தவெளிப்பாட்டையும் மொழியையும் எதிர்பார்க்கமுடியவில்லை. ஆனால் ஏனைய கவிதைகள் ஒப்பீட்டு ரீதியில் சிறந்த வெளிப்பாடும் மொழி எளிமையும் இலாவகமும் கொண்டவையாக அமைந்துள்ளன. விரிவஞ்சி அவற்றின் வெளிப்பாடு அழகியல் ஆகியவை இங்கு ஆராயப்படவில்லை. உள்ளடக்கம் மாத்திரமன்றி அவற்றின் வெளிப்பாடும் பெண்மொழி நோக்கிய பயணமும் இவற்றின் நிலைப்புக்கு சான்றாகி வருகின்றன.



5. முடிவுரை

1986 இல் வெளிவந்த “சொல்லாதசேதிகள்” கவிதைத்தொகுதி ‘முன்மாதிரியாக அமையத்தக்கது’ என்ற குறிப்புடன் வெளிவந்தது. அன்றிலிருந்து, ஒலிக்காத இளவேனில் (2009) வரை ஈழத்துப் பெண்களின் கவிதைகளைக் கொண்ட பலதொகுதிகள் வௌ;வேறு காலங்களில் வெளிவந்திருக்கின்றன. இவற்றின் மூலமாக ஈழத்தின் பெண்ணிய அனுபவங்களையும், சிந்தனைகளையும் ஒரு வரலாற்று நோக்கில் அறிந்துகொள்ள முடியும். ஈழத்தின் போர்ச்சூழல், பெண்ணின் காதல் அனுபவங்கள், புலம்பெயர்வு வாழ்வு, மலையக வாழ்வு, போர்க்களத்தில் போராளியாக அனுபவம், புதிய வாழ்வு முறைகள், அவை மாற்றியமைக்கும் சொல்முறைகள் என்று பலவற்றை இவை நிகழ்த்திக்காட்டுகின்ற போது அவற்றின் முக்கியத்துவம் இன்னும் அதிகரிக்கிறது. இஸ்லாமிய பெண்நிலை அனுபவங்களும் சேர்ந்து கொள்கின்றன. அன்பு, எதிர்ப்பு, மாற்றுக்குரல், கோபம், மகிழ்ச்சி, ஆற்றாமை என்று பல சுருதிகளில் இயங்கும் அனுபவங்களை ஒரு சேர படிக்கும் போது அவர்களின் தனியான கலை இலக்கிய நெறி மெய்ப்பட்டுவருவதும், பெண்மொழி உருவாகி வருவதையும் தரிசிக்கமுடிகிறது. ஈழத்தினைக் களமாகக் கொண்டிருந்த தொகுதிகள் தமிழகம், புகலிடம் என்று பதிப்புப் பெறுவதும் கவனம் பெறுவதும் இவற்றின் முக்கியத்துவத்தினை உணர்த்துகின்றன. ஈழத்துப்பெண்களின் கவிதைகள் தமிழகப் பெண்கவிதைகளைவிட இறுக்கமான தளத்தில் இயங்குகின்றன என்பதையும் எழுந்தமானபோக்கு அற்றவை என்பதையும் இவை மெய்ப்பிக்கின்றன. ஈழத்துத் தமிழ்ப் பெண்களின் கவிதைகள் அவற்றின் சிந்தனையாலும், உள்ளடக்கத்தாலும், வெளிப்பாட்டு அழகியலாலும், மொழித்திறத்தினாலும் என்றும் பேசப்படும் - நிலைத்து நிற்கும் என்றால் அவை மிகையில்லை.





உசாத்துணை நூல்கள்

1.சொல்லாத சேதிகள், சித்திரலோகா மௌனகுரு, பெண்கள் ஆய்வு வட்டம்,1986.
2.மறையாத மறுபாதி – புகலிடப் பெண்கவிதைகள், புகலிடக்கருத்து இலக்கியம்,1993.
3உயிர்வெளி,.சித்திரலேகா மௌனகுரு (தொ.ஆ) சூர்யா பெண்கள் அபிவிருத்தி நிலையம், 1999.
4. பெயல்மணக்கும் பொழுது மங்கை,அ (தொ.ஆ) , , மாற்று, சென்னை. 2007
5. இசை பிழியப்பட்ட வீணை, றஞ்சி, தேவா(தொ.ஆ), ஊடறு, 2007.
6.மை, றஞ்சி,தேவா(தொ.ஆ), ஊடறு,2007.
7.ஒலிக்காத இளவேனில், தான்யா, பிரதீபா கனகா தில்லைநாதன்(தொ.ஆ) வடலி, 2009.



8.உரத்துப் பேச, ஆழியாள், மறு, சென்னை, 2000.
9.சிவரமணி கவிதைகள், சித்திரலேகா மௌனகுரு(ப.ஆ), பெண்கள் ஆய்வு வட்டம், 1993
10. ஞானம் நூறாவது இதழ் - செப்ரெம்பர் 2008 ;சித்திரலேகா மௌனகுரு - ஈழத்தில் பெண்கள் இலக்கியம்
11.கலைமுகம் 50 ஆவது இதழ் - 2010, ஈ.குமரன், ஈழத்துப் பெண்களின் சிந்தனையில் விழிப்புணர்வை ஏற்படுத்திய சொல்லாத சேதிகள்



















;



ஈழத்துத் தமிழ்க் கவிதைகளின் தனித்துவம்: சேரனின் கவிதைகளை முன்வைத்து ஓர் ஆய்வு


-தருமராசா அஜந்தகுமார்

1.ஈழத்துத் தமிழ்க்கவிதைகளின் தனித்துவம் ஓர் அறிமுகம் 

தமிழ்க்கவிதைக்கென்றொரு செழுமையான பாரம்பரியம் இன்று வரை நிலைத்தும் தொடர்ந்தும் வருகின்றது. இதில் ஈழத்துத் தமிழ்க்கவிதைகளின் வகிபாகம்  தனித்துவமானது. ஈழத்துப் பூதந்தேவனாரில் இருந்து இன்றுவரை ஈழத்துத் தமிழ்க்கவிதைக்கென்றொரு பாரம்பரியம் இருக்கிறது.  தமிழக இலக்கியத் தடத்தோடு  இணைந்தும் தொடர்ந்தும் வந்த ஈழத்துத் தமிழ்க் கவிதை மரபு 1950 களில் பேச்சோசைப்பண்பினைப் பெற்றதில் இருந்து புதிய திருப்பத்தைக் காண்கின்றது.  முற்றிலுமான தனித்துவப் போக்கு 1980 களின் பின்பே உருவாகத்தொடங்கியது. 1980களில் இருந்து இலங்கையில் வலுப்பெற்ற இன முரண்பாடுகளும்இ மோதல்களும்இ அகதிவாழ்வும்  மரணத்துள் வாழும் சூழலும் தமிழக அனுபவங்களைக் கடந்த புதிய அனுபவத்தளங்களை பாடுபொருள்களை ஈழத்து இலக்கியத்திற்கு அளித்தது. இவ்வாறாக வாய்த்தஇ புதிய சமூகஅனுபவத்தை மிக உக்கிரமாக ஈழத்துத் தமிழ்க்கவிதை வெளிப்படுத்தியது. ஆபிரிக்கஇ தென்அமெரிக்கஇ பலஸ்தீன மொழிகளுக்கு பிறகு தமிழில் வேறெங்கும் வாய்க்காத இரத்தமும் சதையுமான அனுபவங்கள் ஈழத்துக் கவிதைகளில்தான் உணர்வுபூர்வமாக வெளிப்படத் தொடங்கின. தமிழரின் நசிக்கப்பட்ட குரல்வளைகளில் இருந்து எதிர்ப்பு குரல்களும்இ வலிகளும்இ உருவ உள்ளடக்க புதுமையுடனும்இ உறையவைக்கும் படிமங்களுடனும் வெளிப்பட்டு ஈழத்து தமிழ் கவிதை செழிப்புறத் தொடங்கியது. எண்பதுகளில் இருந்து செழிப்புற்ற தமிழ்கவிதையின் மையப்புள்ளியாக இருந்த சேரனின் கவிதைப் பங்களிப்பை தனித்துவத்தை மதிப்பிடுவதாகவே இக்கட்டுரை அமைகிறது.

2. சேரனின் கவிதைகள் ஓர் அறிமுகம்

சேரன் ஈழத்து நவீன தமிழ்க்கவிதையின் பிதாமகரான மஹாகவியின் மகன். இரண்டாவது சூரிய உதயம் (1983) யமன் (1984) கானல்வரி (1989) எலும்புக்கூடுகளின் ஊர்வலம் (1990) எரிந்து கொண்டிருக்கும் நேரம் (1993) “நீ இப்போதும் இறங்கும் ஆறு - சேரன் கவிதைகள் ஒரு நூறு” (2000). “மீண்டும் கடலுக்கு” (2004) என்று இவரது ஏழு கவித்தொகைகள் வெளிவந்திருக்கின்றன. சேரன் 1975இல் எழுதத் தொடங்கி இன்றைய ‘அலைந்துழல்வு’ வாழ்க்கை வரையும் தொடர்ந்து இயங்கிவருபவர்.  மஹாகவியூடாக நுஃமான்இ சண்முகம் சிவலிங்கம் என்று தொடரும் ஒரு கவிதைப்பாரம்பரியத்தின் முக்கிய பிரதிநிதிதான் சேரன். 1980 களுக்குப்பிறகு கிளைத்த இன ஒடுக்குமுறையின் வன்முறைஇ வன்முறைக்கெதிரான போர்க்குரல்இ புலம்பெயர்வு அனுபவங்கள் என்ற தளங்களில் சேரனின் கவிதைகள் இபரிணாமம் அடைந்தபடி மிகத்தீவிரமாகப் பயணிக்கின்றன. இவற்றில் புரட்சியும் காதலும் மனிதநேயமும் மாறி மாறிப் பயணித்துக் கொண்டிருக்கின்றன.

3.  சேரனின் கவிதைகளின் உள்ளடக்கமும் வெளிப்பாடும்

சேரனின் கவிதைகளின் பாடுபொருளினை
1.    இனமுரண்பாட்டினாலும் வன்முறையினாலும் எதிர்ப்புக்குரலாயும் சுயவிமர்சனங்களாகவும் எழுகின்ற கவிதைகள்

2.    காதல்  காமம் என்ற புதிர்ப்பாதைகளில் பயணிக்கும் கவிதைகள்

3.    சமூகப் பிரச்சினைகளை மிகத் தீர்க்கத்தோடு அணுகும் கவிதைகள்

4.    புலம்பெயர் அனுபவங்களைப் பதிவு செய்யும் கவிதைகள் 
என்று மிக மேலோட்டமாக நாம் வகைபிரித்துக் கொள்ளலாம்.

3.1. சேரனின் கவிதைகளில் இன ஒடுக்குமுறையும் எதிர்ப்புக் குரலும் :

இன ஒடுக்குமுறைச் சூழலில் இருந்து முகிழ்த்த தலைமுறைக் கவிஞனே சேரன். இனவாதத்தின் கொடுமைகளை 1983இன் கலவரங்களை அதன்வழி கிளைத்த புரட்சியின் குரல்களை மரணத்தின் வாதைகளை வலிகளை போராட்டத்தின் மீதான விமர்சனங்களை மிகக் கலாபூர்வமாக வெளிப்படுத்தியதால் சேரன் மிக முக்கியமானவர்.  ‘எனது நிலம்! எனது நிலம்’ என்று ஓங்கி ஒலித்த இ சேரனின் கவிக்குரல்:  நகரம் எரிக்கப்பட்டதும் மக்கள் முகங்களை இழந்ததும்இ நிலத்திலும் காற்றிலும் கூட அந்நியப்பதிவு சுவறியதும்இ ‘சாம்பல் பூத்த தெருக்களில் இருந்துஃ எழுந்து வருக’1 என்றும்  ‘தெருவில் எமது ஃதலைவிதி உள்ளதை ஃ நெருப்பிலே எமது நாட்கள் நகர்வதை ஃஅனுமதிக்கிறாயா? ஃ ‘இல்லை….’ ஃ எழுந்து வெளியில் வாஃ தெருவில் இறங்கு’2  என்றும் போருக்கான புரட்சிக் குரலைச் சேரனிடம்  கேட்கிறோம். மரணத்தின் வேலிக்குள் வாழ்க்கை அகப்பட்டதை அதன் யதார்த்தத்தை சேரன் புதிய படிமங்களுடன் எமக்குள் இறக்குகின்றார்.
“………….”ஃ பிறகு? ஃ பிறகென்ன? ஃ எல்லாம் வழமைப்படி ஃ காலை வெறும் சூரியன் ஃ வெய்யில்  நிலத்தில் ஃ எனக்கு மேல் ஃ  புல்” 3
என்று மிகச் சாதாரணமாக மரணத்தை அதிர்ச்சியூட்டும் விதத்தில் எழுதிவிடுகின்றார். வேறொரு கவிதையில்இ ‘இரத்தம் சிந்திய நிலங்களின் மீது ஃ  நெல் விளைகிறது! சணல் பூக்கிறது ஃ  மழை பெய்கிறது’4    என்கிறார். இதற்கு மேல் இன்னும் ஒருபடி மேலே போய்இ “நாங்கள் உயிர்வாழ்வதற்கான ஃ நிகழ்தகவு ஃஅச்சந்தரும் வகையில் ஃ
குறைந்து போய்விட்டது”5        என்று பதிவு செய்கின்றார். சேரன் அக்காலத்தை வெறுமனே பதிவு செய்தவராக மாத்திரம் இருக்கவில்லை. ஒரு இடத்தில் தனித்து நின்றுவிட்டவரும் இல்லை.  “ஈழத்துப் போர் குறித்து எழுதப்பட்ட ஏராளமான கவிதைகளுக்குப் போர் ஆவணங்கள்இ காலப்பதிவுகள் என்ற முக்கியத்துவம் மட்டும்தான் உள்ளது என்று இப்போது தோன்றுகிறது”6.  என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார். ஆனால் அதையும் மீறி சொல்முறைகளின் படிமங்களும்இ புதுமைகளும் அக்கவிதைகளை கனப்படுத்துகின்றன.
“இரவுகளில்ஃஅநேகமாக எல்லோரும்ஃபயங்கரமான கனவுகளைக் ஃகாண்கிறார்கள் ஃஅவற்றில் ஃ ஹெலிகொப்டர்கள்ஃ தலைகீழாகப் பறக்கின்றனஃ கவச வாகனங்கள்ஃ குழந்தைகளுக்கு மேலாகச்ஃசெல்கின்றன.ஃ நமது சிறுவர்கள்ஃ கடதாசியில் துப்பாக்கி செய்துஃ விளையாடுகின்றார்கள்.”7 என்பதில் வரும் படிமங்கள் முக்கியமானவை.
எனது நிலம் என்று ஓங்கி ஒலித்தும்இ மரணங்கள் கண்டு துவண்டும்இ புரட்சிக்காய் அறைகூவியும் நின்ற சேரனிடம் மனிதநேயமும்இ சமூகவிமர்சனங்களும் அடிச்சரடாய் ஓடிக்கொண்டிருந்தன.  ‘என் கவிதை தொடங்குகிறதுஃ கண்ணீரிலும் இரத்தத்திலும்ஃ கரைகிற வாழ்க்கையில் இருந்து’8 என்று கூறிய சேரன் வெறும் புரட்சி அழைப்போடு சுருங்கிவிடாதுஇ 1990களில் தமிழ்த்தேசியத்தின் மோசமான பக்கங்களையும் மிகத்துணிவோடு சாடினார். போருக்கு அழைத்த அதே சேரன்இ ‘வெற்று வார்த்தைப்பந்தலிலே உம் நினைவைச் சோடித்துத் தெருத் தெருவாய்ப் பாடி வைத்த பரணியெல்லாம் செத்த வீட்டு வாசலிலே வெட்டி இட்ட வாழைகளாய் நாலாம் நாள் உதிர்கிறது ஞாபகமும் உதிர்கிறது’9 என்று பாட நேர்கிறது. அதன் உச்சமாய்இ
 ‘கறைபடியாக் கரங்களெனத் திக்கெட்டும் பறையறைந்து கவிசொன்ன என் வாய்க்குச் செருப்படி’10 என்று பாடி நிற்கின்றது. ‘எம் பரம்பரை போர் புரியட்டும் ‘ என்று சொன்ன அதே சேரன் போராளிக் குழந்தைகளைக் கண்டு மனம் பதறுகிறார். இதை ஜெயமோகன்இ ‘சாம்பல் பூத்த தெருக்களில் இருந்து எழுந்து வருவதற்கு அறை கூவிய சிறுவன் ஒரு தந்தையாக மாறிவிட்டிருக்கிறான்’11 என்று  குறிப்பிடுவது முக்கியமானது. இது சூழலின் மாற்றத்தையும்இ சேரனின் அரசியல் கருத்துநிலை மாற்றத்தையும்இ பதிவு செய்கின்றது.
3.2 சேரனின் கவிதைகளில் சமூக நோக்கு 
சேரனிடம் வெளிப்படும் சமூக சிந்தனைகள் மிக முக்கியமானவை. பெண்களின் நூற்றாண்டாய்த் தொடரும் துயரையும்இ சாதிப்பிரச்சனைகள்இ சுரண்டல்கள்இ எல்லாம் சேர்ந்த ஒரு மனித நேயக் குரலை சேரனின் கவிதைகளில் காணமுடிகிறது. சாதி என்ற பெயரில் மனிதனை மனிதன் அடக்கும் தமிழரின் சாதி     வெறியை மிகவும் உக்கிரமாக சேரன் எதிர்த்தார். ‘முதுகு நாண் கலங்கள் மீது     பூஞ்சண வலைகளாய் சாதிப்பிரிவினை’ பின்னி இருப்பதைக் கண்டுஇ கொதித்து ‘நிர்வாணமாகத் தமிழர் எல்லோரும் தெருக்களில் திரிக’12 என்று சபித்தார்.  கூலிப்பெண்களின் சேற்றுக்குள் இறங்கும் வாழ்க்கை அவர்களுக்கு சேறையும் மற்றவர்களுக்கு சந்தனத்தையும் பூசுவது கண்டு ‘இவர்களது பூமி இருள் தின்னும்இ பொழுது விடிந்தாலும்’13 என்று இரங்குகின்றார்.  சமூகத்தின்  மூடநம்பிக்கைகளும் சீதனமும் ஒரு பெண்ணை முதிர்கன்னியாக்குவதைஇ  “காத்திருஃ உனக்காய் இவர்களனைவரும் ஃ கொண்டுவருவர்.ஃ’ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் ஃபொன்னிற இறகுகள்ஃ தலையில் மினுங்கும் ஃதூயசத்திரியனை’ஃ  பார்த்திரு ஃ உனது கூந்தல் வெளுத்த ஃ  பின்பும் கூட’14 என்று கோபத்தோடு சொல்லுகிறார்.
3.3 சேரனின் கவிதைகளில் காதலும் காமமும்
சேரனின் கவிதைகளில் முக்கிய பங்கினைக் காதலும் காமமும் பெற்றுக் கொள்கின்றன. போர் வெடித்த சூழலிலும்இ புலம்பெயர்ந்த நேரத்திலும் சேரனின் உள்நின்று சுடரும் ஒன்றாய்க் காதலும் காமமும் தீவிரம் பெறுகின்றன. தன்னிடம் வெளிப்படும் புரட்சியை எப்படி தீவிரமாக சேரன் வெளிப்படுத்தினாரோ அவ்வாறே காதல்இ காமத்தையும் வெளிக்காட்டினார்.  ‘காதல்இ காமம்இ சுகிப்புஇ இன்பம் துய்த்தல் என்று வருகிறபோது ….எமக்கு நாமே பூட்டிக் கொண்டிருக்கும் ஒழுக்கத்தளைகளும் மரபுஇ பண்பாடு என்பவற்றின் பிழையான போலித்தனமான புரிந்து கொள்ளல்களுக்கூடாக எமது சமூகங்கள் கட்டமைத்து வைத்திருக்கிற மாபெரும் ஒழுக்கச்சிறைகளும் உவப்பானவையல்ல.’15  என்று இதற்கு விளக்கம் கூறினார்.  ‘உன் நினைவில் வருகிறதா அந்த மழைநாள்’ என்ற நினைவுக் கிளர்தலிலும் ‘என் சின்னப்பெண்ணே எமது அன்றைய சூரியன் அன்றே மறைந்து போயிற்று’ என்று இறந்த காலத்தின் காதலியினையும்இ நீளக்காலூன்றி ஒரு கொக்காய் தவமிருத்தலையும்இ தன்னை வருட அவள் விரல்கள் இல்லையாகிவிட்டபோது நடுவழியில் திசையறியாப் பறவையாகிவிடுவதையும்இ காதலின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டபோது மனதில் கிளை விரித்திருந்த மரங்களுக்கு இலை உதிர்ந்து விடுவதையும்இ ‘துயரத்தின் சாறு பிழிந்த தனிமை எப்படியிருக்கும் என்பதை என் பனிப்பாறையுள் நெருப்பின் உயிர்ச்சுவட்டை எறிந்தவளிடம்’16என்று துயரினை க் கிளர்த்தும் காதலினையும்இ வயது ஏறிய பின்இ பெரும் போகத்தில் திளைத்தலைஇ ஆடையற்ற முதுகில் எழுதிய முத்தத்தின் காயங்களைஇ அவளும் தானும் இருந்த அறை அவள் போனது நூற்றுக்கணக்கான அறைகளில் ஒன்றாக நிறமற்றுப்போய்விடுவதைஇ கோபத்துடன் கல்வி செய்த அன்று:
‘ஒரே நேரத்தில் மரணதொலைவுஃமுடிவற்ற இன்பம்ஃ முடிவற்ற துயரம்ஃஎல்லாவற்றுக்கும் நெருக்கமாக இருந்தோம்’17 என்றும் இன்னும் இன்னும் பாடுகிறார்.  ஆரம்பகாலக் காதல்கவிதைகளைவிட பிரசவக்கோடுகளைத் தடவும் விரல்களில் இருந்து எழுந்து வரும் கவிதைகள் தீவிரம் உடையதாக விளங்குவதைக் காணலாம்.   ‘மதுவில்  நனைந்த ஆடையைக் கழற்றத்  ஃதனியிடம் தேவையா உனக்கு? ஃசதுக்கத்தின் நடுவில் கழற்றிவீசு ஃதங்கக்காசால் உன்னை மறைப்பேன்’18
என்னும் சேரன் குரல் காமத்தின் தீவிர குரலாகிவிடுகிறது.
3.4 சேரனின் கவிதைகளில் புகலிட அனுபவங்கள்
1980களுக்குப் பிறகு கிளைத்த கவிமரபின் அடுத்த கட்டமான புலம்பெயர் கவிதைகளிலும் சேரனின் கவிதைகள் இணைந்து கொள்கின்றன. அங்கு அவரது குரல் நிலமற்ற சோகத்திலும்இ நிலத்தின் நினைவு நிரம்பிய மதுக் கிண்ணத்தோடும்இ நிறப்பாகுபாட்டின் அவலத்தோடும் ஒலிப்பதைக் காணலாம்.
‘….ஊர்ஃநிலையற்றுத் தவித்து என்னைத் தூக்கி வெளியே வீசியது’19 என்று தான் புலம்பெயர்க்கப்பட்டதைக் கூறிஇ ஒளி வராத பனிபாலையில் தான் தஞ்சமாகியதைக் கூறுகிறார். அங்கு ‘மரங்களற்ற வெள்ளைப் பனிக்காட்டில் தனித்தேன்’ என்றும் ‘இப்போதோ நான் தனித்த அசோகமரம்’ என்றும்இ ‘பனிப்பாறை தனித்தீவுக் குளிர்நாளில் எனக்கென்ன எதிர்காலம்?’ என்றும் புகலிடத்தனிமையிலும் விரக்தியிலும் கவிதை ஒலிப்பதைக் காண்கிறோம்.. காரணமற்ற நியாயமற்ற மரணங்கள் கண்டு ‘சாம்பல் பூத்த தெருக்களில் இருந்து எழுந்து வருக’ என்று அறை கூவிய குரல் இப்போதுஇ 
‘கேட்டுக் கவலையுற்றுத் துன்புறுவோம் ஃ பின்னர் வழமைப்படிஇ என்புருக்கும் ஃபனிக்குளிரில் ஃஇறங்கிப் போய்விடுவோம் வேலைக்குஃ பொழுதில்லை அழுவதற்கும்’20  என்று ஆகிவிடுவதையும் உணர்த்துகிறார்.
இவ்வாறு சேரனின் கவிதைகள் பல தளங்களிலும்இ தடங்களிலும் ஓயாது இயங்குவதைக் காணலாம். ஓவ்வொன்றின் வெளிப்பாட்டிலும் வடிவநேர்த்தியும்இ புதுமையும்இ மொழியாற்றலின் வீச்சும்இ படிமத்தின் ஆழமும் மிக கலாபூர்வமாக வெளிப்படுகின்றன. இவற்றைத் தீவிரமாக மதிப்பிட இச்சிறு கட்டுரை இடமளிக்காது  காட்டப்பட்ட உதாரணங்கள் சேரனின் கலாபூர்வத்தையும் அழகியல் பெறுமானத்தையும் ஓரளவிற்கேனும் எடுத்தியம்பவல்லன.

4.முடிவுரை
சாம்பல் பூத்த தெருக்களில் இருந்து இன்று மரங்களற்ற பனிக்காடு வரைக்கும் விசாலித்து பயணம் செய்யும் சேரனின் கவிதைகள் ஈழத்துத் தமிழ்க்கவிதை மரபில் மாத்திரமன்றி தமிழ்க்கவிதை மரபிலும் தனியிடத்தைப் பெறுவன. சேரனே ஒரு கவிதையில் சொல்வது போல்இ
‘எனது கவிதை சிக்கலற்றது ஃ ஆழமான உணர்ச்சிச் சுழிப்புகளில் ஃ அது தன்னுடைய ஆழத்தை இழக்கவில்லை’21
என்பது உண்மையானது ஆகும். சேரனில் கருத்து மற்றும் கவித்துவ தொடர்ச்சியைஇ வளர்ச்சியைக் காணமுடிகின்றது. ‘என்னுடைய முழுக்கவிதைகளையும் எப்போதாவது எழுதி முடிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை’ என்று சேரன் சொல்லுகிறார். ஆனால் அவர் இதுவரை எழுதிய கவிதைகளே அவரை பெரும் கவிஞனாய் வாழவைக்கும் தகுதி கொண்டவை. ஈழத்துத் தமிழ்க் கவிதையை தனித்துவப்படுத்திய முன்னோடிக் கவிஞர்களில் சேரனும் ஒருவர் என்பது ‘உண்மைஇ வெறும் புகழ்ச்சியில்லை.”

அடிக்குறிப்புகள்
1.    சேரன்இ (ஆகஸ்ட் 2000) நீ இப்பொழுது இறங்கும் ஆறு  - சேரன் கவிதைகள் ஒரு நூறுஇ காலச்சுவடுஇ பக்கம் 79
2.    மேற்படிஇ பக்கம் 69
3.    மேற்படிஇ பக்கம் 38
4.    மேற்படிஇ பக்கம்
5.    மேற்படிஇ பக்கம் 94
6.    ஜெயமோகன்இ(2010) இரத்தம் காமம் கவிதை - சேரனின் கவியுலகுஇ ஜெயமோகனின் இணையத்தளம்
7.    நீ இப்பொழுது இறங்கும் ஆறு  - சேரன் கவிதைகள் ஒரு நூறுஇ பக்கம் 95
8.    மேற்படி பக்கம் 154
9.    மேற்படி பக்கம் 184
10.    மேற்படி பக்கம் 118
11.    ஜெயமோகன்இ இரத்தம் காமம் கவிதை - சேரனின் கவியுலகுஇ றறற.தநலயஅழாயn.in
12.    நீ இப்பொழுது இறங்கும் ஆறு  - சேரன் கவிதைகள் ஒரு நூறுஇ பக்கம் 39
13.    மேற்படி பக்கம் 33
14.    மேற்படி பக்கம் 51
15.    சேரன் நேர்காணல்கள் இகடவுளும்இ பிசாசும்இ கவிஞனும் (டிசம்பர் 2006)    காலச்சுவடு பதிப்பகம் பக்கம் 33
16.    நீ இப்பொழுது இறங்கும் ஆறு  - சேரன் கவிதைகள் ஒரு நூறுஇ பக்கம்185
17.    சேரன்இ மீண்டும் கடலுக்குஇ( டிசம்பர் 2004 ) காலச்சுவடு பக்கம் 32
18.    மேற்படி பக்கம் 72
19.    மேற்படி பக்கம்  40
20.    மேற்படி பக்கம் 54
21.    நீ இப்பொழுது இறங்கும் ஆறு  - சேரன் கவிதைகள் ஒரு நூறுஇ பக்கம்196
    

இலக்கியமும் பாலியலும் ஒரு தொடர் சிந்தனைக்கான முன்னுரை




த.அஜந்தகுமார்

இலக்கியம் என்ற துறை தனியே கலை வெளிப்பாடாக மாத்திரம் குறுகிவிடுகின்ற ஒன்று அல்ல. அது பல்வேறு சமூகத்துறைகளுடனும் ஊடாட்டம் கொள்ளுகின்ற துறையாகும். இலக்கியம் பல்வேறு கோட்பாடுகளுடனும் துறைகளுடனும் ஓயாது ஊடாடுவது. அதனால்தான் இலக்கியம் வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத கூறாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
இந்தக்கட்டுரை இலக்கியத்துக்கும் பாலிய லுக்குமான தொடர்பையும் அதன் வெளிப்பாட்டின் பலம், பலவீனம் என்பவற்றுக்கான ஒரு சில புள்ளிகளை இனங்காட்டுவதாகவும் ஒரு தொடர் முயற்சிக்கான முன் ஆரம்பமாகவும் விளங்கு கின்றது.
‘ஒடுக்கப்பட்ட பாலியலின் வெளிப்பாடுதான் இலக்கியம்’ என்று ப்ராய்ட் கூறினார். சங்க இலக்கி யங்களில் இருந்து இன்றைய பின்நவீன இலக்கி யங்கள் வரை பாலியல் என்பது இலக்கியத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. இதனை ஜெயமோகன்,
‘‘எங்கெல்லாம் இலக்கியம் இருக்கிறதோ அங்கெல்லாம் பாலுணர்விலக்கியமும் உண்டு. பழங்குடிப் பாடல்கள் முதல் பேரிலக்கியப் பரப்பு வரை வேதங்களில், பைபிளில்... இந்திய காவிய மரபின் இரு உச்சங்களான கம்பனையும் காளிதாசனையும் பாலுணர்வெழுத்தில் இரு சிகரங்களாகச் சொல்ல வேண்டும்... மனிதர்களுக்கு பாலுணர்வென்பது மிகவும் தேவையாகிறது. அது ஓர் அடிப்படையான இச்சை. இச்சைகள் அனைத்துமே ருசிகள். ருசிகளே அழகுகளாக ஆகின்றன. மனிதன் தன் கற்பனை யைப் பாலுறவு சார்ந்து முடிவிலாது விரித்துக் கொண்டாட வேண்டியிருக்கிறது. அது அவன் வாழ்வின் மீது கொள்ளும் ஆசையின் ஒரு வெளிப்பாடேயாகும். நம் கலைகளில் பாலுணர் வென்பது வாழ்வாசையின் மன எழுச்சியாகவே எப்போதும் வெளிப்பாடு கொள்கிறது’’ என்று மிகத் தெளிவாகவே குறிப்பிடுகிறார்.
இலக்கியத்தில் பாலியலை எழுதுதல் என்பது சிலரைப் பொறுத்தவரை அருவெருக்கத்தக்க ஒன்றாகவும் சிலரைப் பொறுத்தவரை கொண்டாடத் தகுந்த ஒன்றாகவும், சிலர் தேவைப்படும் இடத்தில் அதன் பிரயோகத்தை புரிந்தவராகவும் இருப்பதைக் காணலாம். சிலர் பாலியல் என்பதைத் தமது கோட்பாடுகளுக்கான அரசியலாகவும், பிரபல்யத்துக் கான அரசியலாகவும் பயன்படுத்து வதும் மிகத் தீவிரமாகவே நடைபெற்று வருகிறது.
1. பாலியல் அனுபவங்களை இயல்பாகவும் நேர்த்தியாகவும் வெளிப்படுத்தல்
2. பிரபல்யத்துக்கான ஒரு உபாயம்
3. கோட்பாடுகளுக்கான ஒரு வழிமுறை அரசியல் சாதியம் பின்நவீனம் பெண்ணியம் இப்படி...
4. சமூக வக்கிரங்களை வெளிப்படுத்தல்
5. இன ஒடுக்குமுறையை வெளிப்படுத்தல்
என்று பல தளங்களில் பாலியல் இலக்கியத்தில் கையாளப்படலாம்.
ஈழத்தில் எஸ்.பொவின் ‘தீ’யில் இருந்து இன்று உமாவரதராஜனின் ‘மூன்றாம் சிலுவை’ வரை பாலியல் அனுபவங்கள் மிக நேரடியான முறையில் இலக்கியத்தில் பயில்வதை நாம் காணலாம். தெணியானின் ‘காத்திருப்பு’ நாவல் பாலியல் உறுப்புகள் எதையும் சுட்டாது அதன் வக்கிரத்தின் வாடையின்றி ‘கத்தியில்’ பிரயாணம் செய்கிறது. டானியலின் நாவல்கள் தெணியானின் படைப்புகள் சிலவற்றில் சாதியப் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் ஒரு அரசியலாக பாலியல் பயில்கிறது. இன்றைய பெண்ணியப் படைப்புகளில் பாலியல் திருப்தியீனங்கள், பாலியல் வக்கிரங்கள் நேரடியாக முன்வைக்கப்படுகிறது. பெண்ணுடலைக் கொண்டாடுதல் முக்கிய இடத்தை அடைந்து கொண்டிருக்கிறது. இன்னொருபக்கம் பின்நவீனத்து வம் என்பதே பாலியல் வழியாக எல்லைகளைக் கடத்தல் என்ற ‘பார்வை’ ஆழமாக ஊன்றி பாலியல் உறுப்புகளாலும் கதைகளாலும் இலக்கியப் படைப்புகள் நிறைந்து கொண்டிருக்கின்றன. நாட்டார் கதைகளில் உள்ள பாலியல் கதைகளைத் தெரிந்தும் தொகுதிகள் வந்து கொண்டிருக்கின்றன.
நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் பாலியலும் இலக்கியமும் ஒவ்வாமைத் துறைகள் அல்ல. ஆனால் பாலியல் என்பது வெறும் மலினமான ஒன்றாக மூன்றாம்தர எழுத்தோடு எழுதப்பட்டு பின்நவீனத்துவ லேபிள் பெறும் போதே பிரச்சினை வருகிறது.
பாலியல் உறுப்புகள் வந்து விட்டால் இலக்கியத்தில் அது ஒரு பாவம் இல்லைத்தான். தேவையானபோது நாம் அதை எழுதுவதற்கு கொஞ்சம் கூட கூசத் தேவையில்லை. அத்தோடு சில படைப்புகளில் வரும் பாலியல் உறுப்புகள் அதன் அர்த்தத்தை கடந்து விடுகின்றன.
நற்றிணையில் ‘ஒரு முலை திருகிய திருமாவுன்னி என்று வரும் போது அங்கு திருமாவுன்னியின் ஆணுக்கு எதிரான ஆவேசமான போக்கையே நாம் காண்கின்றோம். கலாவின் ‘கோணேஸ்வரிகள்’ கவிதையில் வருகின்ற ‘யோனி’ தனியே உறுப்பு அல்ல. இன ரீதியாக ஒடுக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட ஒரு பெண்ணின் குமுறல் - ஆவேசம், மனுஷ்ய புத்திரனின் குருடனின் சுயமை துனத்தை ஒட்டிப்பார்க்கும் சோடிக்கண்களைப் பற்றிப் பேசும் கவிதையில் பிரதானப்படுவது சுயமைதுனம் அல்ல - சமூகவக்கிரத்தின் மீதான விமர்சனம்தான்.
எனவே பாலியல் உறுப்புகள் எழுதுவது பாவகாரியம் அல்ல. தேவையான இடங்களில் கருத்துப் புலப்பாட்டுக்கான ஆழமான வடிவமாக இது விளங்குவதையும் காணலாம். அதே நேரத்தில் வெறும் பாலியல் உணர்வை கிசுகிசு உணர்வுடன் எழுதிவிட்டு இதற்குள் ‘ஆயிரம் அர்த்தங்கள்’ உண்டு என்று கதையளக்கும் போதுதான் கோபம் வருகிறது.
தமிழகத்தில் சாருநிவேதிதா, ஸ_ரோடிகிரி, ராஸலீலா என்று பல நாhவல்களில் பாலியலை மிகவெளிப்படையாக எழுதி வருவதைக் காண் கின்றோம். அவற்றின் சமூகப்பயன் என்ன என்கின்ற போது பெரும் கேள்விகள் எழுந்துவிடுகின்றன.
ஈழத்தில் அண்மைக்காலமாக இராகவனின் எழுத்துகள் பாலியலை எந்த கூச்சமும் இல்லாமல் மிக வெளிப்படையாக எழுதிச் செல்கின்றன. அவை தனியே பாலியல் நெருக்கீடுகள் அனுபவங்கள் என்ப வற்றைத் தாண்டி சில சமூக தேச ஒடுக்க நிலை களைப் பேசுவவையாக இருந்தாலும் அதில் துருத்திக் கொண்டு நிற்பது பாலியலே. அவரின் சிறுகதைகள் தனி ஆய்வுக்கு உரியன. எஸ்.பொ வின் ‘காலம்’ இதழ் சிறப்பு மலரில் எஸ்.பொ வின் ‘பால்வீதி’ யில் ஊடாக தானும் பயணித்து பாலியல் ஊடாக பல ஒடுக்கு முறைகளை எழுதவேண்டும் என்று இராகவன் வாக்குமூலம் தந்ததும் ஞாபகம் வருகின்றது.
இலக்கியத்தில் பாலியல் என்பது இன்று நேற்று கையாளப்படத் தொடங்கிய விடயமல்ல அது அழகியல் உணர்வுடன் சங்க இலக்கியங்களிலேயே தொடங்கிவிட்டன. இன்று வரைக்கும் இப்பண்பு தன்னியல்பாகவும், அரசியலாகவும், மூன்றாந்தர எழுத்தாகவும் தொடர்ந்தபடிதான் இருக்கின்றது.
‘தமிழ் இலக்கியங்களில் பாலியல்’ என்ற தலைப்பில் எழுதும் போது அது நீண்டதாகிவிடலாம் எனவே அடுத்து வரும் இதழ்களில் ஈழத்த நாவல்கள் சிறுகதைகள், கவிதைகளில் பாலியல் எவ்வாறு பயின்று வருகின்றது என்பதை எனக்கு எட்டிய படைப்புகளைக் கொண்டு ஆராய உள்ளேன் அவை எமது படைப்புச் செயற்பாட்டில் சில விவாதங்களையும் ஆரோக்கியங்களையும் ஏற்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.’

‘பெரியாழ்வாருக்குள் ஊற்றெடுக்கும் தாய்மை’




--- த.அஜந்தகுமார்

சங்கமருவிய காலத்தில் காரைக்காலம்மையார், முதல்மூன்று ஆழ்வார்கள் மூலம் ஊற்றெடுத்த பக்தி இலக்கியம் பல்லவர்காலத்தில் பெரும் உணர்வுத்தளமாக மாற்றம் கண்டது. உணர்வு வெளிப்பாட்டில் சைவ பக்தி இலக்கியங்களை விட வைணவ பாசுரங்கள் ஆழமானவை. அழகியலும் உணர்ச்சிச் செறிவும் கொண்டவை. ஆண்டாளின் கவித்துவமும் அவளின் உணர்ச்சி உணர்வுத்தளமும் உருக வைப்பவை. பெண்ணுடலினதும் மனத்தினதும் அழகியல் வெளிப்பாடல்கள் அவளது பாடல்கள்.

ஆண்டாளது தந்தைதான் பெரியாழ்வார். பெரியாழ்வார் பெருமாலுக்கு பூமாலை சாற்றும் தொண்டர். பாமாலை சூட்டிய பாவலர். மன்னனால் பட்டர் பிரான் என்று சிறப்பிக்கப்பட்டவர் இவர் இயற்றிய பிரபந்தங்கள் திருப்பல்லாண்டு( 11 பாசுரங்கள்) பெரியாழ்வார் திருமொழி (461 பாசுரங்கள்) இந்த இரண்டு நூல்களும் நாலாயிர திவ்விய பிரபங்தங்களின் தொடங்கங்களாக அமைந்து விளங்குவது இவற்றினதும் பெரியாழ்வாரினதும் சிறப்பை வெளிப்படுத்துவன.

இந்தப்பாடல்களில் எல்லாம் கிருஷ்ணன் லீலைகளை பல்வேறு “பாவ” நிலைகளில் பெரியாழ்வார் அனுபவித்துள்ளார்.

யசோதையாகவும், கண்ணன் மீது முறையிட்ட ஆய்ச்சியர் நிலையாகவும், கண்ணன் மீது காமுற்ற கன்னியர் நிலையாகவும், அக்கன்னியர் பற்றி இரங்கும் தாயாரின் நிலையாகவும் அனுபவித்துப் பாடியுள்ளார். யசோதை நிலையில் அவர் பாடிய பாடல்களே அதிகம்.

பெரியாழ்வார் திருமொழி கண்ணனின் அவதாரச்சிறப்புடன் தொடங்குகிறது. முதால் 25 திருமொழிகளில் கண்ணனது குழந்தைக் குணங்களோடும் பருவக் குறும்புகளோடும் தாயாக்க கலந்து நிற்கும் பெரியாழ்வார் தாய்க்குரிய அன்பை, கருணையை, இரக்கத்தை, கண்டிப்பை மிக ஆழமான உணர்வுத்தளத்தில் தாயாகவே மாறிப் பேசுகின்றார். அவரில் இருந்து சுரக்கும் தாய்மையின் குணத்தை நாமும் அனுபவித்து கண்ணனின் லீலா வினோதங்களோடு கலந்து விடுகின்றோம் .

பிறப்பு, திருமேனி, அழகு, தாலாட்டு, அம்புலி, செங்கீரை, சாப்பாணி, தளர்நடை, அண்மை வருகை, புறம் புல்கல், அப்பூச்சி காட்டல், கம்மம் உண்ணல், காது குத்தல், நீராட்டம் குழல் வாரல், பூச்சூட்டல், காப்பிடல் போன்ற கண்ணனின் குழந்தமைகளை மிகுந்த உணர்வு பூர்வமாக தாய்மயின் உணர்வுத் தளத்தில் நின்று பாடியுள்ளார்.

இவரிடம் வெளிப்படும் தாய்மையின் பரிவை, அன்பை, கருணையை, கண்ணனின் குறும்புகளை , பெருமைகளை இவர் பாடல்கள் எவ்வாறு புலப்படுத்துகின்றன என்பதை பெரியாழ்வார் திருமொழியின் நீராட்டல் என்ற பகுதியூடாக நோக்க விழைகின்றேன்.

‘நீராட்டல்’ என்ற பகுதியில் யசோதையின் நிலையில் இருந்து கண்ணனை நீராட வருமாறு பெரியாழ்வார் அழைக்கின்றார். இதனை இதன் கடைக்காப்புச் செய்யுளில் ,

‘ கார்மலி மேனி நிறத்துக் கண்ணபிரானை உகந்து
வார்மலி கங்கை யசோதை மஞசனமாடிய ஆற்றை’
‘ பட்டர்பிரான்’ ஆகிய தான் பாடியதாகச் சொல்லுகின்றார்.

அவர் கண்ணனை நீராட அழைக்கும் போது பல்வேறு உத்திகளில் அழைத்தார். அதிலெல்லாம்

கண்ணனின் குறும்புகளும்
கண்ணனின் பெருமைகளும்
தாயாய் அவர் வைத்த அன்பும்

வெளிப்பட்டு நிற்பதைக் காணலாம்.

சிறு குழந்தைகள் புழுதியில் அளைந்து உருண்டு புரண்டு விளையாடி விட்டு நிற்கும். ‘நீராட வா’ என்று கூப்பிட்டதும் ஓடும் - ஒளிக்கும், மறுக்கும் - மறுகும். ‘ஓடாதே வாராய்’ என்று அழைத்து நீராட வந்தால் நான் உனக்கு அது தருவேன் இது தருவேன் நீ அச்சாப்பிள்ளை, கெட்டிக்காரன் என்று பாராட்டி நீராட அழைக்கும் தாய்மைக்குணம் பெரியாழ்வாரில் மிக அழகாக வெளிப்படுகிறது.

இந்தப்பாடல் பகுதியில் கண்ணனின் குறும்புகளை மிக அழகாக இவர் சொல்லுகின்றார். வேண்ணெயைத் திருடி உண்ணும் கள்ளனாய், விளையாடி உடம்பெல்லாம் புழுதி ப+சியவனாய், கூடிச்செல்லும் கன்றுகளின் காதில் கட்டெறும்பை விட்டு அவற்றைக் கலைந்தோடச் செய்யும் குறும்பனாய், எண்ணெய்க் குடத்தை சரித்து உருட்டி ஊற்றுபவனாய், தூங்கும் குழந்தையைத் தட்டியெழுப்பியும் கண்ணைப் புரட்டி விழித்தும் வம்பு செய்பவனாய், பசுக்கன்றின் வாலிலே ஓலையைக் கட்டி விட்டவனாய் கனிகளுதிர கல்லால் எறிபவனாய் , மாட்டுத் தொழுவத்தில் கைகளால் அளைபவனாய் கண்ணனின் குறும்பு வடிவங்கள் நீள்கின்றன.

ஒரு தாயாய் கண்ணனின் குறும்புகளைப் பெரியாழ்வார் இரசிக்கிறார், விரும்புகிறார். குழந்தையின் குறும்பைக் கண்டு கொடுப்புக்குள் சிரித்து இரசிக்கும் தாயின் மனதை பெரியாழ்வாரிடம் மிக அழகாகக் காண்கின்றேன். ஆனால் ஊரார் பழி சொல்லுவார்களே என்று அஞ்சுகிறார். இதனை,

‘ப+ணித் தொழுவினில் புக்குப் புழுதியளைந்த பொன்மேனி
காணப் பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர்’
என்று தன் உணர்வை வெளிப்படுத்துகின்றார்.

தன் பிள்ளை என்ன தவறு செய்தாலும் ஒத்துக்கொள்ளாத சராசரித் தாயின் மனநிலையை உள்ளக்கிடக்கையை தாய்மை ப+ரித்துக் கிடந்த பெரியாழ்வரிடம் காண்கின்றோம். வீட்டிலே வெண்ணெயானது கண்ணன் பிறந்த நாள் முதல் இல்லாமல் போவதையும் அதைக் கண்ணன் உண்பதையும் தெளிவாகத் தெரிந்த போதும் நற்றாயான தேவகிக்காகவும் அவன் மீது கொண்ட அன்புக்காகவும் மறந்தும் அதை யாருடனும் கதைக்கமாட்டேன் என்கின்றார்.

கறந்த நற்பாலும் தயிரும் கடைந்துறிமேல் வைத்த வெண்ணெய்
பிறந்ததுவே முதலாகப் பெற்றறியேன் எம்பிரானே
சிறந்த நற்றாய் அலர் தூற்றும் என்பதனால் பிறர் முன்னே
மறந்தும் உரையாட மாட்டேன்

கண்ணா நீ குளிக்காமல் இருக்கப்போகிறேன் என்று விரும்பினால் அந்தக் குறும்பும் எனக்குப் பிடிக்கும்தான். ஆனால் நீ குளிக்கவில்லையென்றால்,

‘ செப்பிள மென்முலையார்கள் சிறுபுறம்பேசிச் சிரிப்பர்
நப்பின்னை காணிற் சிரிக்கும்’ என்பதைச் சொல்லுகின்றார்.
மேலும்’ கண்ணன் குளிக்கவேண்டும் என்பதற்காக கண்ணனின் பெருமைகளை ஞாபகப்படுத்துகின்றார். பிள்ளைகளை ‘ அச்சாப்பி;ள்ளை , என்ரை குஞ்சல்லே, என்ரை கண்ணல்லே, முத்தல்லே என்றெல்லாம் பெருமை சொல்லிக் கொஞ்சிப ;ப+ரிக்கும் தாய்மையைப் பெரியாழ்வாரில் காண்கிறோம். ஆழ்வார், ‘ நண்ணல் அரிய பிரானே , நாரணனே , அழகனே, நம்பீ, மாணிக்கமே என் மணியே என்று கண்ணனின் நாமகரணங்களைச் சொல்லி செல்லமும் கொஞ்சுகிறார்.

நின்ற மராமரம் சாய்த்தாய் என்றும்

கஞ்சன் புணர்ப்பினில் வந்த
கடிய சகடம் உதைத்து
வஞ்சகப் பேய்மகள் துஞ்ச
வாய்முலை வைத்த பிரானே

என்று சகடாசுரனை வதைபுரிந்த திறத்தையும்,, பால் கொடுத்து கண்ணனின் உயிரை எடுக்க நினைத்த ப+தனை அரக்கியின் முலையில் பாலைக் குடித்தே அவளின் உயிரை எடுத்ததையும் பாம்பு வடிவில் வந்த அகாசுரனைத் துன்புறுத்தியது என்றும் நீளும் அவனின் வீரப்பெருமையையும் ஆழ்வார் பேசுகின்றார்.

ஒலிகடல் ஓத நீர் போல் வண்ணம் அழகிய நம்பீ என்று அவன் அழகில் மயங்குகிறார்.
நீ குளிக்க வந்தால் உனக்கு அது தருவேன் இது தருவேன் என்று ஆசையூட்டும் தாய்மையை ஆழ்வாரில் காண்கிறோம். கண்ணா உன்னை நீராட்டுவதற்காக எண்ணைய்,சிகைக்காய், காய்ச்சின நீரோடு நெல்லிக்காயை கடாரத்தில் நிரப்பியும், மஞசள், செங்கழுநீரின் வாசிகை, நாறு நாந்து, அஞசனம் சகிதம் காத்திருப்பதைச் சொல்லுகின்றார்.
மேலும் நீ குளித்த பிறகு – புசிப்பதற்கு
‘அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து
சொப்பட நான் சுட்டு வைத்தேன்’ என்று ஆசையூட்டுகிறார். ‘ உண்ணக் கனிகள் தருவேன்’ என்று விருப்பூட்டுகிறார்.

நீ குளிக்க வராவிட்டால் உன்னை என்னுடன் சேர்ந்து படுக்கவும் விடமாட்டேன் என்று கண்டிப்பும் உள்ளே கரந்து நிற்கும் அன்பும் சேர வெருட்டுகிறார்.

இவ்வாறாக பெரியாழ்வார் திருமொழியின் நீராட்டல் என்ற பகுதியிலே கண்ணனின் குறும்புகள், பெருமைகள், யசோதையாகவே மாறிவிட்ட பெரியாழ்வாரின் தாய்மை என்பன ஒன்று சேர்ந்த ஒரு கவித்துவத்தை அனுபவிக்கமுடிகின்றது.

பாடத்திட்டத்தில் நவீன கவிதை:

---த.அஜந்தகுமார்



கவிதை என்றால் என்னவென்று ஒருவர் எம்மைக் கேட்டால் அதற்கு முடிந்த முடிவான வரையறையை எம்மால் சொல்லிவிட முடியாது. கலைகள் எல்லாவற்றிற்கும் அது பொருந்தும். அதேபோல் அதன் வடிவத்தின் பண்புகள் பற்றிக்கூட முடிந்த முடிவாக கூறிவிட முடியாது. மரபுக்கவிதை என்று நாம் இப்போது கூறும் கவிதைக்கு சில விதிகள்இ சட்டகங்கள் இருக்கின்றன. ஆனால் அது கூறுகின்ற பொருள் இதுதான் என்று காலசூழல் வர்த்தகமானங்களின் ஓட்டத்துக்கு ஏற்ப முடிந்த முடிவாகக் கூறிவிட முடியாது என்றே இன்றைய ஆய்வுலகில் தோன்றுகின்றது. பழந்தமிழ்க் கவிதைகள் தொடர்பாக சில உரையாசிரியர்களிடம் பாடபேதங்கள்இ பொருட்பேதங்கள் இருக்கவே செய்தன. ஆனால் இன்றைய பொருள்கொள்ளல்களில் கருத்தியல்கள் பாரிய செல்வாக்குப் பெறுகின்றன. இரசனை சார்ந்த ஆய்வு மட்டம் வேறாகவும் கருத்தியல் சார்ந்த ஆய்வுமட்டம் வேறாகவும் கிளைபிரிவது தவிர்க்க முடியாதது. எடுத்துக்காட்டாக ஒரு சங்கக் கவிதைக்கு தனியே இரசனை சார்ந்தவன் ஒருவன் பார்ப்பதற்கும் பின்நவீனத்துவம் சார்ந்தவன் பார்ப்பதற்கும் பல வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன.

சங்க இலக்கியம் மறுவாசிப்பின் தேவை என்ற கட்டுரையில் க.பூரணச்சந்திரன் ;யாதும் ஊரே’இ’யாயும் ஞாயும்’ என்று நாம் இலகுவாய் அறிந்த சங்கப்பாடல்களைக் கட்டுடைப்புச் செய்து அவற்றின் மறுவாசிப்பின் தேவையை வலியுறுத்தியுள்ளார். ஒரு தொகைப் பாடல்கள் உள்ள சங்கக் கவிதை போன்றவற்றுக்கு ஒரு பொருள் அல்ல பல பொருள் கொள்ளும் நிலைக்கு ஆய்வுலகு வளர்ந்துவிட்ட சூழலில் “நவீன கவிதை” இன்னும் பல சிக்கல்களுக்கு ஆட்படும் அவலம் மேலெழுந்துள்ளது.

கவிதையில் மரபு-புதிசு-நவீனம் என்று பிரிப்பது சரியா தவறா என்று கூட விவாதிக்கப்படுகின்றது. அது கவிதையாக இருக்கிறதா? இல்லையா? என்பதே கேள்வி என்கின்றார்கள். அது சரியென்ற போதிலும் விதிகள் - வரையறைகளுக்கு ஆட்படாது மேலெழுந்த இந்த நவீன கவிதைகளுக்கு என்று ஒரு முக்கியம் இருப்பதும் கவனிக்கப்பட வேண்டியதே.

பெரும்பாலும் நவீன கவிதை தொடர்பாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் பிரதானமானது புரியவில்லை – விளங்கவில்லை - இருண்மையாக உள்ளது என்பதுதான். ஏன் புரியவில்லை எது புரியவில்லை என்ற கேள்வியை நாம் இத்தோடு சேர்த்து எழுப்புவது மிக அவசியமானது. நாயக்கர் காலத்திற்கும் நவீன காலத்திற்கும் சிலர் முடிச்சுப்போடுகின்றார்கள். வித்துவச் செருக்கும் புரியாமை என்பதுமே அதற்குக் கற்பிக்கும் காரணங்கள்……

நாயக்கர் காலத்திலே “மூடர் முன்னே பாடல் மொழிந்தால் அறிவாரோ….” என்று பாடியதைப் போல் இன்றைய நவீன கவிஞர்களும் - தொடர் வாசிப்பு – தீவிர வாசிப்பு – நவீன கவிதைகளுடனான பரிச்சயம் இல்லாதர்கள,; கவிதை விளங்கவில்லை ஏன் இப்படி எழுதுகிறார்கள் என்று தலையில் அடித்துக்கொள்வதால் என்ன இலாபம் என்று மல்லுக்கட்டுகின்றார்கள். இந்த நேரத்தில் கவிதையின் இயல்பான ஊற்றையும சில கவிதை உற்பத்திச்சாலைகளையும் வேறுபடுத்திக் கண்டு கொள்ள வேண்டிய பாரிய பொறுப்பு வாசகனிடம் உண்டு. சிலர் புரியாததாகவே எழுதுவதை நவீன – பின் நவீன கவிதை என்றும் கற்பிதம் செய்து கொள்ளும் போது பல அபத்தங்கள் நேர்ந்துவிடுகின்றன. இந்தக் கொடுப்பினை தமிழ் இலக்கியத் தாய்க்கு தவிர்க்க முடியாததாக கிடைத்தபடியே இருக்கிறது. இயல்புக்கும் உற்பத்திக்கும் ஈடுகொடுத்தபடிதான் நவீன கவிதை பயணம் செய்ய வேண்டி இருக்கின்றது.

இந்த இடர்பாடுகள்இ சிக்கல்கள்இ நவீன கவிதைக்கு இருக்கும் சூழலில் பாடத்திட்டத்தில் இக் கவிதை இடம்பெறும் போது பல குழப்பங்கள் ஏற்பட்டுவிடுகின்றன. தரம் 11 புதிய பாடத்திட்டத்தில் பல நவீன கவிதைகள் இடம்பெற்றுள்ளன. பல ஆசிரியர்கள் அக்கவிதைகள் என்ன கூறுகின்றன என்று கண்டுபிடிக்க முடியாது. தலையை உடைத்து சில இலக்கியவாதிகளை அணுகுவதையும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு வகையில் மாணவர்களை விட ஆசிரியர்களை அது “திணறடிக்க”அல்லது “தேடலுக்கு” ஆட்படுத்த கருவியாக அமைந்தும் இருந்திருக்கின்றது. அக்கவிதைகள் சிலவற்றுக்கு பாடப்புத்தகத்தில் நல்ல கேள்விகளும் கேட்கப்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில் “நவீன கவிதைக்கு” கேட்கக் கூடாதஇ இக்கவிதை என்ன கூறுகிறது? என்ற முடிந்த முடிவான வினாக்களைக் கேட்டும் இருக்கின்றது. இக்கேள்விக்கு எல்லா மாணவர்களும் ஒரே பதிலை எழுத வேண்டும் என்றும் இல்லை ஆசிரியரும் முடிந்த முடிவான பதிலைக் கொடுக்கக்கூடாது.

இந்நிலையில் எனக்குத் தெரிந்த ஒரு மாணவன் என்னை அணுகி தரம் 11 தமிழ் பாடத்திட்டத்தில் உள்ள மாதுமையின் “எனது புத்தகம்” என்ற கவிதையை வாசிக்கச் சொல்லிவிட்டு இந்தக் கவிதை என்ன சொல்லுகின்றது என்று கேட்டான். மிக அமைதியாக இரண்டு மூன்று தடவை கவிதையை வாசித்துவிட்டு வாழ்க்கையை பற்றி குறியீடாகவும் படிமமாகவும் சில விடயங்களை இக்கவிதை கூறுகிறது என கொள்ளலாம் என்றேன்.

அவன் உடனேஇஇல்லையே ரீச்சர் சொன்னவர் “இது விபச்சாரி ஒருத்தியைப் பற்றித்தான் கூறுகின்றது என்று” நான் மிக ஆறுதலாக அவன் பதிலைக் கிரகித்து விட்டு சரியெடாப்பா அப்படியும் கொள்ளலாம் என்று அவனுக்கு விடை கொடுத்தேன். பல பாடசாலை மாணவர்களை விசாரித்தபோதும் (விபச்சாரி பற்றியது என்றே படிப்பித்தார்கள்.என்றார்கள். எனக்கும் அந்த “பொதுமை” ஆச்சரியம் தந்தது ஏதும் “செமினார்” நடந்ததோ என்று என் நண்பரான ஆசிரியரை விசாரித்தேன். அவர் இல்லை என்றார். என்றாலும் ஆசிரியர்களைப் பொறுத்தவரை அப்படி கூடிக் கதைத்ததோ எப்படியோ ஒரு பொதுமைக்குள் வரவேண்டியது அவசியமானதுதான் என்று நான் மனதுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டேன். எனினும் அவர்கள் கற்பிக்கும் போது முடிந்த முடிவான பொருள் இதற்கு இல்லை இப்படியும் கொள்ளலாம் என்று அவர்களின் சின்ன மூளைக்கு (?) புகட்ட வேண்டியது மிக மிக அவசியமானது என்பதை மறுக்க முடியாது. நவீன கவிதை ஒன்றுக்கு இதுதான் பொருள் என்று யாரும் கூற முடியாது (நவீன கவிதைக்கு மட்டுமல்ல) அது பிரதி. அதற்கு வௌ;வேறுபட்ட பொருள்களை நாம் கொள்ள முடியும். ஏன் படைப்பாளி நினைத்தது வேறாக இருக்கும்;. அது குற்றம் அல்ல. அது இலக்கிய அறம். ஒரு படைப்பாளி ஒரு படைப்பை எழுதியதும் அவன் வேலை முடிவடைந்து விடுகின்றது. வாசகர்தான் அதற்குப் பிறகு எல்லாமே. நாம் இதைத்தான் எழுதினேன். உதை அல்ல என்று கூறவும் முடியாது கூறிக் கொண்டிருக்கவும் முடியாது. அதனால்தான் “படைப்பாளிஇ இறந்துவிட்டான்இ படைப்பு இருக்கிறது” என்று சொல்கின்றார்கள்.

நவீன கவிதை என்ற பெயரில் வரும் உற்பத்திகளை விலக்கி நல்லவற்றை இனங்காணும். வாசகப் பிரக்ஞை – அவற்றோடு ஊடாடும் வாசக மனம் நமக்கு வாய்க்க வேண்டுமாக இருந்தால் மனத்தடைகளை விலக்கி எல்லையற்ற வாசகராய் எம்மை விரித்துஇ சொற்களுக்கு அப்பால் விரிந்து செல்லும் கவிதை வெளிக்குள் நாம் சஞ்சரிக்க வேண்டும் அந்தப் பக்குவம் எளிமையாக வாய்த்துவிடாதுஇ அதற்கான ஒரே தகுதிஇ நல்ல வாசகன் என்பதுதான்.

மகாகவி பாரதியாரும் கவிதைச் சிந்தனைகளும்




---த.அஜந்தகுமார்

பாரதி தமிழுக்கும் தமிழ்க்கவிதைக்கும் கிடைத்த ஒரு கொடை. 1882 ஆம் ஆண்டு மார்கழி 11 ஆம் திகதி பாரதி பிறந்தான். “பாரதி” என்ற பெயர் தமிழ்க்கவிதை மரபில் ஒரு மந்திரம். அவனை உச்சரிக்காமல் நாம் தமிழ்க்கவிதையை நினைத்துவிடமுடியாது. தான் வாழ்ந்த சமூக –தேசிய சூழலுடன் தன்னைப் பிணைத்தும் உள்ளீர்த்தபடியும் தன்னைத் தன் படைப்புகளின் மூலம் வெளிப்படுத்தியவன் பாரதி. இலக்கியப் படைப்பாளியாக, பத்திரிகையாளனாக, சமுதாயசிந்தனையாளனாக , நாட்டுவிடுதலைப் போராளியாகப் பல நிலைகளில் இவன் செயற்பட்டவன். பேராசிரியர் கா.சிவத்தம்பி,

“மகாகவி என்பவன் கடந்த காலம் பற்றிய விளக்கத் தெளிவும் நிகழ்காலம் பற்றிய ஆய்வறிவும் எதிர்காலம் பற்றிய கற்பனாதரிசனம் உடையவனாகவும் விளங்குவான்…..அதாவது இலக்கியப்பாரம்பரியத்தின் திசை திருப்பியாக மகாகவி இருப்பான்”

என்று கூறியது போலவே பாரதி மகாகவியாக பாரதி இலங்கினான் -இயங்கினான். தன் ‘மனச்சிறு புள்ளினை எங்கணும் ஓட்டி’ கவி பாடிய வல்லவன் இவன். அவனின் பிறந்த நாளான இன்று அவனின் கவிதைச் சிந்தனைகளை ஒரு முறை மீட்டிப் பார்ப்பதே சுகம் தரும் ஒரு அனுபவம்தான்.

;ஆடுதல் பாடுதல் கவி ஆதினைய கலைகளில்
ஈடுபட்டென்றும் இருப்பவர் - பிறர்
ஈனநிலை கண்டு துள்ளுவார்;;’

என்று பாடிய பாரதி தேசத்துக்காய் - சுதந்திரத்துக்காய் -சமூகவிடுதலைக்காய் பாடினான்,பாடுபட்டான். இதனாலேயே,

‘ வெள்ளத்தின் பெருக்கைப் போல் கவிப்பெருக்கும்
கலைப்பெருக்கும் மேவுமாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெலாம்
விழிபெற்று பதவி கொள்வார்’
என்று நம்பினான்.- பாடினான். இதனாலேயே தன்னை ‘இருங்கலைப் புலவனாக்குதி’ பாஞ்சாலி சபதத்தில் பராசக்தியிடம் அவன் வேண்டினான். ‘பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா’ என்று வெறுமனே அவன் பாடிவிடவில்லை.

நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதுஞ் சோராதிருத்தல்

என்ற தெளிவுடையவனாகவும் உறுதியுடையவனாகவும் இருந்தான். அதே நேரத்தில் தனக்கு முன்னிருந்த கவிமரபை ஆய்ந்து அறிந்த மேதையாக இருந்தான்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர் போல் இளங்கோவைப் போல்
ப+மிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை

என்று இவன் பாடியதில் கவிமனத்தையும,; ஆய்வுமனத்தையும் காண்கின்றோம். இன்னும் மேலும் ,
இறவாத புகழுடைய புது நூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்’
என்று அவாவி நின்றான். பாடினான், சாதித்தான்.


தான் கவிதை பாடவேண்டிய தேவையை தெய்வம் தன்னை இன்ன இன்ன காரணங்களுக்காக கவிபாடச் சொன்னது என்று பின்வருமாறு பாடுகிறான்.

நாட்டு மக்கள் பிணியும் வறுமையும்
நையப் பாடென் றொரு தெய்வம் கூறுமே
கூட்டி மானுடச் சாதியை ஒன்றெனக்
கொண்டு வையம் முழுதும் பயனுறப்
பாட்டிலே அறம் காட்டெனும் ஓர் தெய்வம்:
பண்ணிலின்பமும் கற்பனை விந்தையும்
ஊட்டியெங்கும் உவகை பெருகிட
ஓங்கும் இன்கவி ஓதெனும் வேறொன்றே

இதில் இவன் கவிதைச் சிந்தனைகள் சமூகத்தையே சுற்றிச் சுற்றி நிற்பதைக் காணலாம். ‘பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும்’ என்பதே இவன் கனவாக இருந்தது.

‘புதியன விரும்பு’ என்று புதிய ஆத்திசூடி சொன்ன பாரதி, ‘மந்திரம் போல் சொல்லின்பம் வேண்டுமடா’ என்று சொன்ன பாரதி,

‘சுவை புதிது பொருள் புதிது
வளம் புதிது சொற்புதிது சோதிமிக்க
நவகவிதை எந்நாளும்
அழியாத மகாகவிதை’ களைப் பாடினான். இதனாலேயே துணிந்து,

புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத்
தமிழ்மொழியைப் புகழிலேற்றும்
கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையென்னும்
வசையென்னாற் கழிந்த தன்றே

என்று பெருமிதத்துடன் பாடமுடிந்தது.

‘தெளிவுறவே அறிந்திடுதல் தெளிவுதர மொழிந்திடுதல்’ பாரதியின் திண்ணமான எண்ணமாக இருந்தது. இதனை பாஞ்சாலி சபத முகவுரையில்,

‘ எளிய பதங்கள் எளிய நடை எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம் பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியம் ஒன்று தற்காலத்தில் செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகிறான். ஓரிரண்டு வருசத்து நூற்பழக்கமுள்ள தமிழ் மக்கள் எல்லோரும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன் காவியத்திற்குள்ள நயங்கள் குறைவுபடாமலும் நடத்தல் வேண்டும்’

என்று கூறுவதில் இருந்து விளங்கிக் கொள்ளலாம்..

பாரதி பாடிய தேசியப்பாடல்களும் பக்திப்பாடல்களும் வேதாந்தப் பாடல்களும் முப்பெரும் பாடல்களும் தனிப்பாடல்களும் வசனகவிதைகளும் அவன் ஆளுமையின் விகசிப்புகளாய் இன்றும் நின்று நிலைக்கின்றன.

“ தேவாரத்திலும் திருவாசகத்திலும் திருவாய்மொழியிலும் திருக்குறளிலும் கம்பராமாயணத்திலும் அன்பு கொள்ளாதவனுக்கு தமிழபிமானம் உண்மையிலே பிறக்க நியாயமில்லை “

என்று பாரதி தன்னுடைய கட்டுரை ஒன்றிலே எழுதினான். அதே போல பாரதியைப் படிக்காதவர்கள் தமிழனாகவோ தமிழபிமானியாகவோ இருக்கமுடியாது, இருப்பதில் அர்த்தமும் இல்லை.


நன்றி : உதயன் - வலம்புரி dec.2009